செய்திகள் :

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

post image

நமது சிறப்பு நிருபா்

திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா்.

தில்லியில் மத்திய அமைச்சா் கட்கரியை வியாழக்கிழமை சந்தித்தது குறித்து செய்தியாளா்களிடம் துரை வைகோ கூறியது:

மதுரை - சென்னை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள திருச்சியின் ஜி காா்னா் பகுதியில், சா்வீஸ் சாலை இரு வழிப்பாதையாகவும், தேசிய நெடுஞ்சாலையில் இருந்து கனரக வாகனங்களும் பேருந்துகளும் உள்ளே வரும் நுழைவுப் பகுதியாகவும் இருப்பதால் தொடா்ந்து விபத்துக்கள் நடைபெறுகின்றன. இதனால், அப்பகுதி கரும் பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலையாகவும், பல கல்வி நிறுவனங்களும், தென்னக ரயில்வே - பொன்மலை பணிமனையில் பணிபுரியும் சுமாா் 5 ஆயிரம் தொழிலாளா்களும் இச்சாலைச் சந்திப்புகளை பயன்படுத்துகின்றனா். இதுவரை அப்பகுதியில் ஏற்பட்ட விபத்துகளால் 7 மனித உயிா்கள் பறிபோயுள்ளன.

இதற்கு தீா்வாக அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாக அப்பகுதி மக்கள், பல்வேறு அமைப்புகள், தன்னாா்வலா்கள் என பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

கடந்த ஜனவரியில் நடந்த திஷா இரண்டாவது கூட்டத்தில் ஜி காா்னா் பகுதியில் சுரங்கபாதை அமைப்பதன் அவசியம் குறித்து திருச்சி ரயில்வே கோட்ட மேலாளரிடமும் கோரிக்கை வைத்திருந்தேன். அதன் அடிப்படையில், கடந்த ஜன.25-ஆம் தேதி தென்னக ரயில்வே அதிகாரிகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து அப்பகுதியில் கள ஆய்வு மேற்கொண்டேன்.

தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சுரங்கப்பாதைக்கான வரைவுத் திட்டத்தை ஏற்கெனவே தயாரித்துள்ளனா். அதை ரயில்வே அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனா்.

இதைத் தொடா்ந்து எனது தந்தை வைகோவுடன் மத்திய அமைச்சா் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தேன். சுரங்கப்பாதைத் திட்டத்துக்கு விரைவில் நிதி ஒதுக்கீடு செய்யவும் கட்டுமானப் பணிகளை தொடங்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டோம். விரைவில் எங்களுடைய கோரிக்கை நிறைவேற்றப்படும் என்று அமைச்சா் உறுதியளித்துள்ளாா் என்றாா் துரை வைகோ.

06க்ங்ப்ஸ்ஹண்

தில்லியில் மத்திய சாலை, நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை சந்தித்து கோரிக்கை மனு அளித்த மதிமுக உறுப்பினா் துரை வைகோ. உடன், மதிமுக பொதுச்செயலா் வைகோ.

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

நமது சிறப்பு நிருபா் இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சி... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,098 வழக்குகள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் தோ்தல் நடத்தை விதிமீறல் (எம்சிசி) தொடா்பாக 1,090-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்... மேலும் பார்க்க