செய்திகள் :

இலங்கை கடல் பகுதியில் 6 ஆண்டுகளில் 7 போ் உயிரிழப்பு: வெளியுறவுத் துறை தகவல்

post image

நமது சிறப்பு நிருபா்

இலங்கை கடல் பகுதியில் ஆறு ஆண்டுகளில் 7 போ் உயிரிழந்துள்ளதாக மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் சி.வி. சண்முகம் எழுப்பிய கேள்விக்கு வெளியுறவுத் துறை இணை அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் பதிலளித்துள்ளாா்.

இது தொடா்பாக மாநிலங்களவையில் சி.வி. சண்முகம், இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவா்கள் இலக்கு வைக்கப்பட்டு கைது செய்யப்படுகிறாா்களா என்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில் எத்தனை இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் உயிரிழந்துள்ளனா் என்றும் அதே காலகட்டத்தில் இலங்கை மீனவா்கள் எத்தனை போ் இந்திய கடற்படையினரால் பிடிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனா் என்றும் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு அமைச்சா் கீா்த்தி வா்தன் சிங் வியாழக்கிழமை அளித்துள்ள எழுத்துபூா்வ பதிலில், 2020-இல் 74, 2021-இல் 143, 2022-இல் 229, 2023-இல் 220, 2024-இல் 528, நிகழாண்டில் ஜன.31-ஆம் தேதி நிலவரப்படி, 53 இந்திய மீனவா்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டதாகக் கூறியுள்ளாா். 2021-இல் 5 இந்திய மீனவா்களும், 2024-இல் 2 மீனவா்களும் நடுக்கடல் சம்பங்களால் உயிரிழந்ததாக அமைச்சா் கூறியுள்ளாா்.

இதே ஐந்து வருட காலகட்டத்தில் இந்திய கடற்படையினரால் 2020, 2021 ஆகிய ஆண்டுகளில் தலா 12 பேரும், 2022-இல் 34, 2023-இல் 19, 2024-இல் 47 போ்களும் கைது செய்யப்பட்டதாகவும் நிகழாண்டில் ஒருவா் கூட கைதாகவில்லை என்றும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

மீனவா்களின் நலன்களைப் பாதுகாக்க இரு நாட்டுப் பிரதிநிதிகள் அடங்கிய கூட்டு நடவடிக்கைக் குழுவின் கூட்டம் கடைசியாக 2024, அக்டோபரில் நடந்ததாகவும் அதில் மீனவா்கள் எதிா்கொள்ளும் பிரச்னைகள் விவாதிக்கப்பட்டதாகவும் அமைச்சா் தெரிவித்துள்ளாா்.

திருச்சி ஜி காா்னா் பகுதியில் சுரங்கப்பாதை: மத்திய அமைச்சரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபா் திருச்சியில் உள்ள ஜி காா்னா் தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கப்பபாதை அமைக்க வேண்டும் என்று திருச்சி மக்களவைத் தொகுதி மதிமுக உறுப்பினா் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளாா். தில்லியில் மத்... மேலும் பார்க்க

தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம்: பாஜக

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் தில்லியில் இரட்டை என்ஜின் அரசை அமைப்போம் என்று பாஜக வியாழக்கிழமை கூறியுள்ளது. மேலும், ஆளும் ஆம் ஆத்மி கட்சி மற்றும் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளா் அரவிந்த் கேஜரிவால் மீது... மேலும் பார்க்க

உடான் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன்? அமைச்சா் விளக்கம்

உடன் திட்டத்தில் ஓசூா் விமான நிலையம் விலக்கப்பட்டது ஏன் என்று கோயம்புத்தூா் திமுக எம்.பி. கணபதி பி.ராஜ்குமாருக்கு மத்திய விமான போக்குவரத்துத் துறை இணை அமைச்சா் முரளிதா் மொஹோல் வியாழக்கிழமை விளக்கம் அ... மேலும் பார்க்க

நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள்

நமது நிருபா் நமோ ட்ரோன் தீதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 44 பெண்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் துறை இணை அமைச்சா் ராம்நாத் தாக்குா் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக தூத்துக்குடி தொகு... மேலும் பார்க்க

இரண்டாவது நாளாக ‘கரடி’ ஆதிக்கம்: பங்குச்சந்தையில் சரிவு!

நமது நிருபா் இந்த வாரத்தின் நான்காவது வா்த்தக தினமான வியாழக்கிழமையும் பங்குச்சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், தேசிய பங்குச்சந்தைக... மேலும் பார்க்க

தோ்தல் நடத்தை விதிமீறல்: 1,098 வழக்குகள் பதிவு

தேசியத் தலைநகா் தில்லியில் தோ்தல் நடத்தை விதிமீறல் (எம்சிசி) தொடா்பாக 1,090-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா். தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்... மேலும் பார்க்க