செய்திகள் :

Health: அல்சர், தொப்பை, ரத்த விருத்தி, சிறுநீரக பிரச்னைகளுக்கு தீர்வு தரும் வாழைத்தண்டு..!

post image

திகப்படியான சதையைக் குறைத்து, உடலை 'சிக்’கென மாற்றும் வாழைத்தண்டில் நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் அதிகம். வாழை மரத்தை வெட்டினாலும், கடைசியில் எஞ்சி இருக்கும் வாழைத்தண்டில் ஏராள நன்மைகள் உண்டு. இதன் ஒப்பற்ற பயன்களைப்பற்றிக் கூறுகிறார், திருப்பூரைச் சேர்ந்த சித்த மருத்துவர் அழகேந்திரன்.

'அந்தக் காலத்தில் வாழை மரத்தை அரம்பை, கதளி, அமணம் என்று அழைத்தார்கள். தமிழர் கலாசாரத்தில் வாழை மரத்தின் பயன்பாடு அன்றாடம் இருந்தது. எல்லாக் காலங்களிலும் கிடைக்கக்கூடிய வாழைத்தண்டு தன்னை முழுமையாக மருத்துவப் பயன்களுக்காகவே அர்ப்பணித்துள்ளது. மிகவும் குளிர்ச்சித்தன்மை கொண்டது. அதன் சுவை துவர்ப்புத்தன்மை கொண்டது. வெப்பத்தினால் ஏற்படக்கூடிய பல பிரச்னைகளுக்கு சிறப்பான தீர்வுகளை அளிப்பதில் வாழைத்தண்டுக்கு நிகர் இல்லை.

வாழைத்தண்டு

நம் உடலிலிருந்து சிறுநீரை வெளியேற்றும். இதனால் சிறுநீரகக் கோளாறுகள், கோடைகாலத்தில் பலருக்கும் ஏற்படும் சிறுநீரகக் கற்கள் போன்றவற்றைத் தடுக்கக்கூடிய ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு. சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் ஏற்பட்டால், வாழைத்தண்டை இடித்து சாறு எடுத்து அருந்தி வர, விரைவிலேயே எரிச்சல், நீர்க்கடுப்பு நீங்கும். ஆண்களுக்கு சிறுநீரோடு கலந்து ரத்தம் வெளியேறுவதைத் தடுக்கும். அல்சர் எனப்படும் வயிற்றுப்புண்ணைக் குணப்படுத்தும் ஆற்றலும் வாழைத்தண்டுக்கு உண்டு. விந்துப்பை வீக்கத்தை சரிசெய்யும்.

அதிகமாக உதிரப்போக்கு ஏற்படும் பெண்கள் வாழைத்தண்டை உணவில் சேர்த்துக்கொள்வது அந்த பிரச்னையிலிருந்து விடுபட வழிவகுக்கும். இதில் நார்ச்சத்து நிறைந்துள்ளதால், உடல் பருமனைக் குறைக்கும். தொப்பை இருப்பவர்கள் வாழைத்தண்டை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. வாழைத்தண்டில் அதிகப்படியான தாது உப்புக்கள் மற்றும் புரதச்சத்து உள்ளது. குழந்தைகளுக்கு வாழைத்தண்டில் விதவிதமான உணவுகளைச் செய்துகொடுக்க, அவர்களது ஆரோக்கியம் மேம்படும்.

ஹீமோகுளோபின்

குழந்தைகளுக்கு வாழைத்தண்டை எப்போதும் போல பொரியலாக மட்டுமே செய்துகொடுக்காமல் ஜூஸ், மோரில் கலந்து நீர்மோர், பச்சடி, சூப்பாக செய்துகொடுக்கலாம். பயத்தம் பருப்பு சேர்த்து கூட்டாகவும் செய்யலாம். விரும்பிச் சாப்பிடுவார்கள்.

வாழைத்தண்டு ரத்தத்தில் ஹீமோகுளோபினை அதிகரிக்கச் செய்யும் தன்மை கொண்டது. ரத்தசோகை உள்ளவர்கள் வாழைத்தண்டை தவறாமல் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

வாழைத்தண்டு தவிர வாழைப்பூவும், பிஞ்சும் ரத்த விருத்தியை அதிகரிக்கும். வாழைப்பூவில் வடகம் செய்து சாப்பிட்டால், பித்த நோய்கள் மற்றும் கர்ப்பப்பை பிரச்னைகள் சரியாகும். விஷக்கடி, தீக்காயங்களுக்கு வாழைப்பட்டை, வாழைத்தண்டின் சாறைப் பூசினால், எரிச்சல் போவதுடன், சீக்கிரத்தில் ஆறிவிடும்.

வாரம் முழுவதும் வாழைத்தண்டை உணவில் சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. வாரத்துக்கு மூன்று முறை சேர்த்துக்கொண்டாலே, அதன் முழுப் பயனையும் பெறலாம்.

பகல் நேர உணவில் மட்டுமே வாழைத்தண்டு இடம்பெற வேண்டும். இரவு உணவில் கட்டாயம் சேர்க்கக் கூடாது.

சிறுநீரை அதிகரிக்கச் செய்யும் என்பதால், வயதானவர்கள் வாழைத்தண்டை உணவில் சேர்ப்பதைக் குறைத்துக்கொள்வது நல்லது.

வாழைத்தண்டு தயிர் பச்சடி

ஒரு சின்ன துண்டு வாழைத் தண்டை நூல் எடுத்து வட்டமாக நறுக்கி, மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவேண்டும். இதில், 2 கப் தயிர், ஒரு பச்சைமிளகாய், கொத்தமல்லித் தழை, சின்ன துண்டு இஞ்சி, சிறிது உப்பு சேர்த்து மீண்டும் அரைக்கவும். எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்துக் கொட்டவும். சுவை அபாரமாக இருக்கும். விழுதாக அரைத்து செய்வதால், சத்துக்கள் அனைத்தும் உடலில் சேரும். உடல் உஷ்ணப் பாதிப்பு இருப்பவர்களுக்கு இந்த பச்சடி ஏற்றது.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb

Doctor Vikatan: கட்டுமஸ்தான உடல், வயது குறைவு... நன்றாக இருந்தவர்கள் திடீரென உயிரிழப்பது ஏன்?

Doctor Vikatan: "நல்ல கட்டுமஸ்தான உடம்பு, எந்தக் கெட்ட பழக்கமும் இல்லை... வயசு 45 தான், 55 தான் பொசுக்குனு செத்துட்டார்' என்று அவ்வப்போது கேள்விப்படுகிறோம். இப்படி உடலை ஃபிட்டாக வைத்திருந்தாலும், திடீ... மேலும் பார்க்க

Amit shah-க்கு நெருக்கடி தரும் STALIN-ன் All India Move... டெல்லி ஸ்கெட்ச்! | Elangovan Explains

இளங்கோவன் எக்ஸ்பிளைன்சில்,தமிழ்நாட்டில் தளம் அமைக்க வேண்டும் என அமித்ஷா மூன்று முக்கியமான பிளானை வகுத்துக் கொடுத்துள்ளார். அதை முறியடிக்க கூடிய வகையில் மூன்று முக்கியமான அஸ்திரங்களை ஏவியுள்ளார் ஸ்டாலி... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கு - இதுக்கெல்லாம் பணம் கொடுத்தாங்களா?! DMK | Parliament | US | UGC Adani Imperfect Show

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,* - டெல்லி சட்டமன்றத் தேர்தல்: 60% வாக்குப்பதிவு... யார் முன்னிலை வகிக்கிறார்கள்?* - ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்காளர் வாக்குப்பதிவு?* - கௌதம் அதானியின் இளைய மகனின் தி... மேலும் பார்க்க

Thiruparankundram மலை பிரச்னைக்கு இதுதான் காரணம் | Decode

திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் ஆடு கோழி பலி கொடுக்க எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி, பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இந்த பிரச்னையின் தொடக்கம் என்ன, பின்னணியில் இரு... மேலும் பார்க்க

``பாம் வைப்பதும் அவரே.. எடுப்பதும் அவரே...'' -எடப்பாடியை விமர்சித்த அமைச்சர் ரகுபதி

எதிர்கட்சி தலைவர் எடப்பாடியை விமர்சித்து சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பதிவு ஒன்றை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “ சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் வளையமாதேவியில் ... மேலும் பார்க்க

US Issue: ``கைவிலங்குடன் 40 மணிநேர பயணம்; 19 பெண்கள் அவதி..'' -பிரதமருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

பயணம் முழுவதும் கைகளில் கைவிலங்கு, கால்கள் சங்கிலியால் பூட்டப்பட்டதாக அமெரிக்​கா​வில் இருந்து சட்டவிரோதமாக தங்கியிருந்த காரணத்துக்காக திருப்பி அனுப்பப்பட்ட இந்தி​யர்​கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்துள்ளன... மேலும் பார்க்க