செய்திகள் :

தில்லி, நொய்டாவில் தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

post image

தில்லி, நொய்டா பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளதையடுத்து தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.

தலைநகர் தில்லியில் மயூர் விஹார் பகுதியில் உள்ள ஆல்கான் சர்வதேச பள்ளிக்கு மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.

இதையடுத்து காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க | சென்னையில் கடும் பனி மூட்டம்: விமானங்களின் சேவை பாதிப்பு

அதேபோல, உத்தரப் பிரதேச மாநிலம் நொய்டாவின் ஷிவ் நாடார் பள்ளியில் மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, பள்ளி நிர்வாகம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தது.

காவல் துறை, தீயணைப்புப் படை, வெடிகுண்டு தடுப்புப் பிரிவு சோதனையில் ஈடுபட்டுள்ளது.

இதுவரை வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை, வெடிகுண்டு மிரட்டல் புரளியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மகா கும்பமேளாவில் 3-வது முறையாக தீ விபத்து!

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.செக்டார் 18-ல் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று க... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோ... மேலும் பார்க்க

வயநாட்டில் இறந்த கிடந்த 3 புலிகள்: வனத்துறை தீவிர விசாரணை

வயநாடு: வயநாடு கூட்டமுண்டா எஸ்டேட் பகுதி மற்றும் மயக்கொல்லி வனப்பகுதியில் 3 புலிகள் இறந்ததை அடுத்து வனத்துறையின் 8 பேர் கொண்ட குழு விசாரணையைத் தொடங்கியுள்ளது. கேரளம் மாநிலம் வயநாடு மேப்பாடி அருகே க... மேலும் பார்க்க

பினாகா ராக்கெட் அமைப்பு: பாதுகாப்பு அமைச்சகம் ரூ.10 ஆயிரம் கோடி ஒப்பந்தம்

பினாகா ராக்கெட் ஏவும் அமைப்பை மேம்படுத்தி தாக்கும் திறனை அதிகரிப்பதற்காக ரூ.10,147 கோடி மதிப்பீட்டிலான ஒப்பந்தங்களை பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை மேற்கொண்டது. இதுதொடா்பாக பாதுகாப்பு அமைச்சகம் வெள... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவுக்காக பாகிஸ்தான் ஹிந்துக்கள் இந்தியா வருகை!

பிரயாக்ராஜ் : உத்தர பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் பங்கேற்க பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தைச் சோ்ந்த 68 ஹிந்துக்கள் கொண்ட குழு இந்தியா வந்துள்ளனா். இதில் குறைந்தது 50 ப... மேலும் பார்க்க