செய்திகள் :

மகா கும்பமேளாவில் 3-வது முறையாக தீ விபத்து!

post image

உத்தரப் பிரதேசத்தின், பிரயாக்ராஜில் பிரம்மாண்டமாக நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் மூன்றாவது முறையாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

செக்டார் 18-ல் ஏற்பட்ட தீ விபத்தில் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!

12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா ஜனவரி 13-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கியது. மகா சிவராத்திரி திருநாளான பிப். 26-ஆம் தேதிவரை, 45 நாள்களுக்கு நடைபெறும் இந்த ஆன்மிக பெருநிகழ்வில் உலகம் முழுவதும் இருந்து வரும் கோடிக்கணக்கான பக்தர்கள் நீராடிச் செல்கின்றனர்.

இந்த நிலையில், மகா கும்பமேளாவின் சத்நாக் கேட் காவல் நிலையத்துக்கு உள்பட்ட பகுதியில் வெள்ளிக்கிழமை காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில், திறந்தவெளியில் அமைக்கப்பட்டிருந்த 20-க்கும் மேற்பட்ட கூடாரங்களில் தீ பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த பக்தர்களை வெளியேற்றி, தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத் துறையினர் ஈடுபட்டனர்.

சில மணிநேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூன்றாவது முறை

ஏற்கெனவே ஜனவரி மாதத்தில் இரண்டு முறை கும்பமேளா பகுதியில் தீ விபத்து ஏற்பட்டது.

ஜன.19ல் கும்பமேளாவில் 19-வது மண்டலத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் பெரும் தீ விபத்து ஏற்பட்டு, 18 கூடாரங்கள் தீக்கிரையாகின.

ஜன. 25ல் வாரணாசியில் இருந்து கும்பமேளாவுக்கு வந்திருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. அதனருகில் இருந்த மற்றொரு காரும் தீப்பற்றி எரிந்தது.

இந்த இரு விபத்துகளிலும் எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

30 பேர் பலி

மௌனி அமாவாசையன்று கும்பமேளாவில் புனித நீராட கோடிக்கணக்கான பக்தர்கள் கூடினர். அப்போது திரிவேணி சங்கமத்தில் ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 30 பக்தர்கள் பலியாகினர். மேலும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் பிகார் ஆளுநர்!

உத்தரப் பிரதேச மாநிலம், பிரயாக்ராஜில் நடைபெற்றுவரும் மகா கும்பமேளாவில் பிகார் ஆளுநர் ஆரிஃப் முகமது கான் புனித நீராடினார். உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ரா... மேலும் பார்க்க

மகாராஷ்டிர தேர்தல்: 5 மாதத்தில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது எப்படி? ராகுல் கேள்வி

மகாராஷ்டிரத்தில் மக்களவைத் தேர்தலுக்கும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையிலான 5 மாதங்களில் 39 லட்சம் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ள... மேலும் பார்க்க

பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் 12 பயங்கரவாதிகளைக் கொன்றதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் ... மேலும் பார்க்க

சத்தீஸ்கரில் முன்னாள் கிராமத் தலைவர் வெட்டிக் கொலை!

சத்தீஸ்கர் மாநிலம், தண்டேவாடா மாவட்டத்தில் வரவிருக்கும் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிடும் முன்னார் சர்பஞ்ச் (கிராமத் தலைவர்) ஒருவரை நக்சல்கள் கொன்றதாக போலீஸார் தெரிவித்தனர். வியாழனன்று இரவு அரன்பூர்... மேலும் பார்க்க

கொல்கத்தா மருத்துவர் கொலை வழக்கு: குற்றவாளிக்கு மரண தண்டனை கோரிய மனு ஏற்பு!

கொல்கத்தா ஆா்.ஜி.கா் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவா் பாலியல் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், குற்றவாளி சஞ்சய் ராய்க்கு மரண தண்டனை வழங்கக்கோரி சிபிஐ தாக்கல் செய்த... மேலும் பார்க்க

ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு! வீடு, வாகனக் கடன் வட்டி குறைகிறது!

வங்கிகளுக்கான குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25% குறைத்து 6.25% ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ஆர்பிஐ தெரிவித்துள்ளது.ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்கோ... மேலும் பார்க்க