செய்திகள் :

பாகிஸ்தானில் உளவுத்துறை நடவடிக்கை: 12 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

post image

பாகிஸ்தானின் வடமேற்கு கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கையில் பாதுகாப்புப் படையினர் 12 பயங்கரவாதிகளைக் கொன்றதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு வசிரிஸ்தானின் ஹசன் கெல் பகுதியில் பிப்.5,6 இரவு நடத்தப்பட்ட நடவடிக்கையில் பாதுகாப்புப் படை வீரர் கொல்லப்பட்டதாகப் பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக உளவுத்துறைக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பாதுகாப்புப் படையினர் பயங்கரவாதிகளின் மறைவிடத்தைத் திறம்படக் குறிவைத்துத் தாக்கினர். இந்த தாக்குதலில் 12 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஐஎஸ்பிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

இறந்த தீவிரவாதிகளிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்புப் படையினருக்கும் பொதுமக்களுக்கும் எதிராக பல பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.

கைபர் பக்துன்க்வா பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகின்றது.

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க

கனடாவில் காணாமல் போன 20,000 இந்திய மாணவர்கள்!

இந்தியாவிலிருந்து கனடாவுக்கு மாணவர்கள் விசாவில் சென்று, ஆனால் இதுவரை எந்த கல்லூரியிலும் சேராமல், 20000 மாணவர்கள் எங்கிருக்கிறார்கள் என்ற தகவலே தெரியாமல் இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பார்க்க

விடுப்பு எடுப்பதில் தகராறு! சக பணியாளர்களை கத்திக்குத்திய அரசு ஊழியர்! (விடியோ)

மேற்கு வங்கத்தில் விடுப்பு தர மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுப்பு தர மறுத்ததால் சக ஊழியர்... மேலும் பார்க்க

வல்லுறவு குற்றவாளி ஆசாராம் பாபு படத்துடன் தில்லி மெட்ரோவில்

தில்லி மெட்ரோ ரயிலில் பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆசாராம் பாபுவின் படத்துடன் விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.உத்தர பிரதேச மாநிலம், ஜோத்பூரில் உள்ள தன... மேலும் பார்க்க

ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு! சாதகமும் பாதகமும்!

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கடன் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக... மேலும் பார்க்க

மகா கும்பமேளா: இதுவரை 40 கோடி பக்தர்கள் புனித நீராடல்!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ்ஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில் வெள்ளிக்கிழமை வரை 40 கோடிக்கும் அதிகமான பக்தர்கள் புனித நீராடியுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்... மேலும் பார்க்க