செய்திகள் :

விடுப்பு எடுப்பதில் தகராறு! சக பணியாளர்களை கத்திக்குத்திய அரசு ஊழியர்! (விடியோ)

post image

மேற்கு வங்கத்தில் விடுப்பு தர மறுத்ததால் 4 பேரை கத்தியால் குத்திய அரசு ஊழியரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேற்கு வங்க மாநிலத்தில் அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவலகத்தில் விடுப்பு தர மறுத்ததால் சக ஊழியர்கள் 4 பேரை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் அமித் குமார் சர்க்கார் என்ற அந்த ஊழியர் ரத்தக்கறைப் படிந்த கத்தியுடன் தெருவில் நடமாடும் விடியோக் காட்சிகளும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அமித் குமார் கொல்கத்தாவின் நியூ டவுனில் உள்ள கரிகரி பவன் தொழில்நுட்பக் கல்வித்துறையில் பணியாற்றிவந்தார்.

இதுபற்றி காவல்துறையினர் கூறுகையில், “வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம், சோடேபூரில் உள்ள கோலாவைச் சேர்ந்த சர்க்கார், தொழில்நுட்பக் கல்வித் துறையில் பணிபுரிகிறார். இன்று காலை, விடுப்பு எடுப்பது தொடர்பாக தனது சக ஊழியர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, அவர் அவர்களை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓட முயன்றார்.

காயமடைந்த சக ஊழியர்களான ஜெய்தேப் சக்ரவர்த்தி, சாந்தனு சாஹா, சர்தா லேட் மற்றும் ஷேக் சதாபுல் ஆகியோர் அருகிலுள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக இருக்கிறது” என்றனர்.

அவருக்கு ஏன் விடுமுறை மறுக்கப்பட்டது அதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை. அமித் குமார் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றுவருவதாகவும், சக ஊழியர்களை கத்தியால் குத்தியவக்கு மன ரீதியிலான பாதிப்புகள் ஏதேனும் இருக்கிறதா? என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்ப... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.வந்தே பாரத் ரயிலில்... மேலும் பார்க்க

500 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விக்ரம் மிஷ்ரி கூறுகையில், “பிரதமர்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாளே உள்ள நிலையில். ஆம் ஆத்மி கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்தார். தில்ல... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க