செய்திகள் :

ரெப்போ விகிதம் 0.25% குறைப்பு! சாதகமும் பாதகமும்!

post image

ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ விகிதம் 0.25 சதவீதம் குறைக்கப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் கடன் தவணை குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிப்ரவரி மாதம் நடைபெற்ற நிதிக் கொள்கைக் குழுவின், புதிய ரெப்போ வட்டி விகிதத்தை முடிவு செய்வதற்கான கூட்டம், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்ட சஞ்சய் மல்ஹோத்ராவின் தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் குறுகிய காலக் கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.25 % குறைப்பது என்ற முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ விகிதம் 6.50 சதவீதத்திலிருநது 6.25 சதவீதமாகக் குறைந்துள்ளதாக ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா அறிவிப்பினை வெளியிட்டார்.

ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்திருந்த நிலையில், 5 ஆண்டுகளுக்குப் பிறகு ரெப்போ வட்டி விகிதம் முதல் முறையாக தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர் கடன், வீடு மற்றும் வாகனக் கடன்களுக்கான வட்டி விகிதம் குறையும், மாதாமாதம் செலுத்தும் தவணைத் தொகையில் ஒரு கணிசமான தொகை குறையும். இதன் மூலம் மக்கள் கையில் கொஞ்சம் பணமிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உதாரணத்துக்கு வீட்டுக் கடனாக ரூ.30 லட்சத்தை 20 ஆண்டுகளில் செலுத்தும் வகையில் 9 சதவீத வட்டிக்கு கடன் பெற்றவர் மாத தவணையாக ரூ.27,000 செலுத்துவார் என்றால், இனி வட்டி 8.75 சதவீதமாக மாறினால் ரூ.26,550 ஆக மாதத் தவணை குறையலாம் என்று கணக்கிடப்படுகிறது. மாதத் தவணை அதிகமாக இருக்கும்போது, மிச்சமாகும் தொகை அதிகமாக இருக்கும்.

(நடப்பு 2024-25ஆம் நிதியாண்டில், அக்டோபரில் இருந்து இந்தியப் பொருளாதாரம் தொடர்பான கவலை அதிகரித்து வருகிறது. இந்தக் காலக்கட்டத்தில், அமெரிக்க டாலர் மற்றும் பிற முக்கிய நாணயங்களுக்கு எதிராக ரூபாயின் மதிப்பு குறையத் தொடங்கியது. இதனால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை உயர்ந்தது. )

புதிய நிதியாண்டு தொடக்கத்திலிருந்தே மந்த நிலை தொடங்கியது. எனவே புதிய சூழ்நிலை மிகவும் சிக்கலானது. விலைவாசி உயர்வுக்கு மத்தியில், வளர்ச்சியை எப்படி உயர்த்துவது?

எனவே, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைத்திருக்கிறது.

இது குறித்து ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறுகையில், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்க வேண்டியதன் அவசியத்தை நிதிக் கொள்கைக் குழு கவனத்தில் கொண்டுள்ளது என்றார். (தேவையெனில் இந்தப் பாராவை வைத்துக்கொள்ளலாம்.)

இதன் மூலம் என்ன பயன் என்றால், வங்கிகள் மக்களுக்கு அளிக்கும் கடன்கள் மீதான வட்டி விகிதம் குறையும். ஏற்கனவே கடன் பெற்று இஎம்ஐ செலுத்தி வரும் மக்களுக்கு மாதத் தவணை தொகை குறையும். மக்களிடம் சற்று பணம் இருக்கும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதிர்பார்ப்பு இப்படியிருக்க பொருளாதார நிபுணர்களோ, அமெரிக்கா போன்ற நாடுகளில் வட்டி விகிதம் குறைக்கப்படாமல், இந்தியாவில் ரெப்போ விகிதம் குறைப்பால், ஏற்கனவே சரிந்து வரும் இந்திய ரூபாயின் மதிப்பு குறையலாம் என்றும், பணவீக்கம் காரணமாக நாள்தோறும் உச்சம் தொட்டு வரும் தங்கம் விலை அதிகரிக்கலாம், அவ்வளவு ஏன் பங்குச் சந்தைகள் வீழ்ச்சியை சந்திக்கும் நிலையும் ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினர் கைது

மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 7 வங்கதேசத்தினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறி நான்கு பெண்கள் உள்பட ஏழு வங்கதேசத்தினர் மும்ப... மேலும் பார்க்க

வந்தே பாரத் ரயிலில் புதிய வசதி: ரயில்வே அறிவிப்பு

வந்தே பாரத் ரயிலுக்கான பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் போது உணவைத் தேர்வு செய்யாவிட்டாலும் ரயிலில் ஏறிய பிறகும் உணவு பெறும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாக ரயில்வே அறிவித்துள்ளது.வந்தே பாரத் ரயிலில்... மேலும் பார்க்க

500 பயிற்சி ஊழியர்களை பணி நீக்கம் செய்யும் இன்ஃபோசிஸ்!

முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ், அதன் மைசூர் வளாகத்தில் பணியாற்றி வரும் சுமார் 500 பயிற்சி ஊழியர்களை பணிநீக்கம் செய்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இவர்கள் அனைவரும் கடந்த 2024ஆம் ஆண்டு அக... மேலும் பார்க்க

அமெரிக்க அதிபர் டிரம்பை சந்திக்கிறார் பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 12, 13 ஆம் தேதிகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சந்திக்கவிருப்பதாக வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஷ்ரி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து விக்ரம் மிஷ்ரி கூறுகையில், “பிரதமர்... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும்: கோபால் ராய்

தில்லி சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு ஒருநாளே உள்ள நிலையில். ஆம் ஆத்மி கட்சி 50-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெறும் என ஆம் ஆத்மி கட்சித் தலைவர் கோபால் ராய் தெரிவித்தார். தில்ல... மேலும் பார்க்க

மேற்கு வங்கம்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலி

மேற்கு வங்கத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் பலியாகினர்.மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தின் கல்யாணியில் உள்ள பட்டாசு ஆலையில் வெள்ளிக்கிழமை பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டத... மேலும் பார்க்க