செய்திகள் :

1 கி.மீக்கு 50 பைசா தான் செலவு - கோவை கல்லூரி மாணவர்கள் உருவாக்கிய ஹைட்ரஜன் வாகனம்

post image

கோவை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ரெநியூ’ (ReNew) என்ற மாணவர் குழு உள்ளது. இவர்கள் கத்தார் நாட்டில் நடைபெற உள்ள 'ஷெல் இக்கோ-மாரத்தான் - ஆசியா பசிபிக் 2025' எனும் சர்வதேச அளவிலான போட்டியில் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொள்ள உள்ளனர்.

மாணவர் குழு

இந்த போட்டியில் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பிரிவின் கீழ் இந்தியாவிலிருந்து பங்கேற்கும் ஒரே அணியும் இவர்கள் தான். இதற்காக ‘புரோட்டோடைப்’ என்று சொல்லப்படும் முன்மாதிரி ரக 3-சக்கர வாகனம் ஒன்றை மாணவர்கள் உருவாக்கியுள்ளனர். அந்த வாகனத்துக்கு ‘திமி 2.0’ என்று பெயர் வைத்துள்ளனர். 

இதுகுறித்து வாகனத்தை உருவாக்கிய மாணவர்கள் கூறுகையில், “இது மாணவர்களுக்காக  சர்வதேச அளவில் நடைபெறும் போட்டி. இதில் கார்பன் மாசு ஏற்படுத்தாத ஆற்றல் திறன் கொண்ட வாகனங்களை வடிவமைத்து உருவாக்க வேண்டும். இந்த போட்டி நாளை பிப்ரவரி 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை கத்தார் நாட்டின் தோஹாவில் நடைபெறுகிறது. இதில் 20 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கின்றன. இதில் கலந்து கொள்ளும் அணிகள் புரோட்டோடைப் வாகனங்களை மின்சாரம் மூலமாகவோ, ஹைட்ரஜன் செல் மூலமாகவோ உருவாக்க வேண்டும். 

நாங்கள் காற்று மாசு ஏற்படுத்தாத வகையில் ஒரு வாகனத்தை வடிவமைத்துள்ளோம். பெட்ரோல் வாகனங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு நான்கு ரூபாய் செலவாகும். மின்சார வாகனங்களில் ஒரு கிலோ மீட்டருக்கு இரண்டு ரூபாய் செலவாகும். ஹைட்ரஜன் வாகனத்தில் ஒரு கிலோ மீட்டருக்கு வெறும் 50 பைசா மட்டுமே செலவாகும்.

ஹைட்ரஜன் வாகனம்

ஹைட்ரஜன் எரிபொருள் சுற்றுச் சூழலுக்கும் உகந்தது. பெட்ரோல் டீசல் பயன்பாட்டால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது. மின்சார வாகனங்கள் மாசு ஏற்படுத்தாது என்று கூறினாலும், அதற்கு பயன்படுத்தப்படும் பேட்டரிகள் மறுசுழற்சி செய்யப்படும் போது கார்பன் மாசு ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக தான் இந்த ஹைட்ரஜன் எரிபொருள் இருக்கிறது.

நாங்கள் ஹைட்ரஜன் எரிபொருளால் இயங்கும்  3 சக்கர வாகனத்தை 5 மாதங்களில் உருவாக்கியுள்ளோம். இதில் பொருத்தப்பட்டுள்ள 80% பாகங்கள் நாங்களே தயாரித்துள்ளோம். 20% பாகங்கள் மட்டும் வெளியில்  இருந்து பெறப்பட்டது. சராசரியாக ஒரு லிட்டர் ஹைட்ரஜனில் 200 கி.மீ தூரம் செல்லும் வகையில் இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தின் அதிகபட்ச வேகம் மணிக்கு 35 கி.மீ ஆகும். இந்த  போட்டியில் வேகத்தை விட மைலேஜ் மற்றும் நிலைத்தன்மைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். மிக குறைந்த கார்பன் உமிழ்வு, அதிக செயல்திறன், மற்றும் நிலையான கட்டமைப்பை கொண்ட வாகனங்கள் போட்டியில் அங்கீகாரம் பெறும்.

ஹைட்ரஜன் வாகனம்

அட்லாண்டிக் ப்ளூ மார்லின் என்கிற மீனின் உருவத்தை முன் மாதிரியாக கொண்டு இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் கார்பன் பைபர் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிவிசி ஃபோம் (Upcycled PVC Foam) பயன்படுத்தப்பட்டுள்ளதால் இதன் உறுதித்தன்மை வலுவாகவும் எடை மிக குறைவாகவும் இருக்கும்.  வாகனத்தின் தோற்றம் பெரியதாக இருந்தாலும் எடை 53 கிலோ மட்டுமே.” என்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

வயநாடு: ஒரே நாளில் மூன்று புலிகள் உயிரிழந்த பரிதாபம்; வனத்துறையின் பதில் என்ன?

வனப்பரப்பும் வனவிலங்குகளும் நிறைந்த கேரள மாநிலத்தின் வயநாட்டில் மனித - வனவிலங்கு எதிர்கொள்ளல்களும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தொடர்ந்து மேற்கொள்ளப்படும் முறையற்ற வளர்ச்சிப் பணிகளின்... மேலும் பார்க்க

கோத்தகிரி: குப்பைக் குவியலில் உணவு தேடி அலையும் கரடிகள்... தொடரும் அவலம்!

வனங்களும் வனவிலங்குகளும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கழிவு மேலாண்மை என்பது மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் முறையின்றி கொட்டப்படும் காய்கறி , இறைச்சி உள்ளிட்ட உணவு கழிவுகளால... மேலும் பார்க்க

பந்திப்பூர்: காய்கறி லாரிகள் மட்டும் டார்கெட்; தெறிக்கும் ஓட்டுநர்கள், திணறும் வனத்துறை

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கின்றன முதுமலை முச்சந்திப்பு வனப்பகுதிகள். தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம், கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய புலிகள் காப்பகங்கள், கேரளாவின்... மேலும் பார்க்க

Elephants: மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்; மருமகளை ஏற்றுக்கொள்ளாது; தாய்மாமனுக்குப் பெண் கொடுக்காது

''நீரோடையில் ஒரு யானைக்குடும்பம் நீர் அருந்திக்கொண்டிருந்தது. யானைகளை, யானைக்கூட்டம் என்று சொல்லக்கூடாது. 'யானைக்குடும்பம்' என்பதுதான் சரியான வார்த்தை. நீர் அருந்திவிட்டு மேலேறும்போது அந்தக் குடும்பத்... மேலும் பார்க்க

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்! | Album

இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி... மேலும் பார்க்க

சென்னை: கரை ஒதுங்கிய 1,000 பங்குனி ஆமைகள்; `மீன் வளம் குறையும் அபாயம்' - சூழலியலாளர்கள் கவலை!

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 ஆலிவ் ரிட்லி ஆமைகள் சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இனமான ரிட்லி ஆமைகள் மொத்தமாக உயிரிழப்பது சூழலியல் செயற்பாட்டாளர்கள் மத்தியி... மேலும் பார்க்க