செய்திகள் :

கோத்தகிரி: குப்பைக் குவியலில் உணவு தேடி அலையும் கரடிகள்... தொடரும் அவலம்!

post image

வனங்களும் வனவிலங்குகளும் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கழிவு மேலாண்மை என்பது மிக முக்கிய ஒன்றாக கருதப்படுகிறது. குடியிருப்பு பகுதிகளில் முறையின்றி கொட்டப்படும் காய்கறி , இறைச்சி உள்ளிட்ட உணவு கழிவுகளால் ஈர்க்கப்படும் கரடி, சிறுத்தை, காட்டுப்பன்றி போன்ற வனவிலங்குகள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி வருகின்றன. தங்களுக்கான உணவுகளை குப்பை குவியல்களில் தேடி அலையும் அவலம் ஏற்படுகிறது.

இதனால் வனவிலங்குகளுக்கு கடுமையான நோய்த்தொற்று உள்ளிட்ட பல்வேறு நோய் பாதிப்புகள் ஏற்படுவதுடன் மனித வனவிலங்கு எதிர்கொள்ளல்கள் ஏற்படும் அபாயமும் தொடர்ந்து வருகிறது.

குப்பையில் உணவு தேடும் கரடி

குறிப்பாக கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் முறையின்றி கொட்டப்படும் உணவு கழிவுகளால் அவற்றை உண்ணும் கரடிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். கோத்தகிரி அருகில் உள்ள கக்குச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக குப்பை குவியல்களுக்கு மத்தியில் கரடி ஒன்று உணவு தேடி அலையும் படங்கள் வெளியாகி அனைவரையும் வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது.

இது குறித்து தெரிவிக்கும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், "கரடிகளைப் பொறுத்தவரை தங்களுக்கான உணவுகளை நுகரும் திறன் அடிப்படையிலும் தேடிக் கொள்கின்றன. வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் உணவு கழிவுகளை முறையாக மேலாண்மை செய்யாத காரணத்தால் பழங்கள், காய்கறிகள் போன்ற கழிவுகளால் ஈர்க்கப்படும் கரடிகள் அவற்றை தேடி குப்பை குவியல்களில் அலைகின்றன.

குப்பையில் உணவு தேடும் கரடி

இது போன்ற மனித தவறுகளால் அவற்றின் ரோமங்கள் முதல் உணவு மண்டலங்கள் வரை பல்வேறு நோய் தொற்று பாதிப்புகள் ஏற்படும். மேலும், மனித வனவிலங்கு எதிர்கொள்ளலும் ஏற்படுகின்றன. இதனை சாதாரணமாக கழிவு மேலாண்மை என்று கடந்து விட முடியாது. வனவிலங்கு பாதுகாப்பின் ஒரு அங்கமாகவே கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். வனத்துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் மட்டுமே இது போன்ற அவலங்களை தடுக்க முடியும்" என்றனர்.

பந்திப்பூர்: காய்கறி லாரிகள் மட்டும் டார்கெட்; தெறிக்கும் ஓட்டுநர்கள், திணறும் வனத்துறை

நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக இருக்கின்றன முதுமலை முச்சந்திப்பு வனப்பகுதிகள். தமிழ்நாட்டின் முதுமலை, சத்தியமங்கலம், கர்நாடகாவின் பந்திப்பூர் ஆகிய புலிகள் காப்பகங்கள், கேரளாவின்... மேலும் பார்க்க

Elephants: மகளுக்குச் சொல்லிக் கொடுக்கும்; மருமகளை ஏற்றுக்கொள்ளாது; தாய்மாமனுக்குப் பெண் கொடுக்காது

''நீரோடையில் ஒரு யானைக்குடும்பம் நீர் அருந்திக்கொண்டிருந்தது. யானைகளை, யானைக்கூட்டம் என்று சொல்லக்கூடாது. 'யானைக்குடும்பம்' என்பதுதான் சரியான வார்த்தை. நீர் அருந்திவிட்டு மேலேறும்போது அந்தக் குடும்பத்... மேலும் பார்க்க

சென்னை பட்டினம்பாக்கம் சீனிவாசபுரம் முகத்துவாரத்தில் இரை தேடி குவிந்த பறவைகள்! | Album

இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி குவிந்த பறவைகள்இரை தேடி... மேலும் பார்க்க

சென்னை: கரை ஒதுங்கிய 1,000 பங்குனி ஆமைகள்; `மீன் வளம் குறையும் அபாயம்' - சூழலியலாளர்கள் கவலை!

கடந்த ஒரு மாதத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 1000 ஆலிவ் ரிட்லி ஆமைகள் சென்னை கடற்கரையில் கரை ஒதுங்கியிருக்கின்றன. பாதுகாக்கப்பட்ட இனமான ரிட்லி ஆமைகள் மொத்தமாக உயிரிழப்பது சூழலியல் செயற்பாட்டாளர்கள் மத்தியி... மேலும் பார்க்க

முதுமலை: பீர் பாட்டிலை வாயில் வைத்து விளையாடும் குட்டி யானை - கொதிக்கும் இயற்கை ஆர்வலர்கள்

அடர்ந்த வனத்தையும் அரிய வகை உயிரினங்களையும் கொண்டிருக்கிறது நீலகிரி மாவட்டத்தின் முதுமலை புலிகள் காப்பகம். நீலகிரி உயிர்க்கோளக் காப்பகத்தின் மிக முக்கிய அங்கமாக விளங்கி வரும் முதுமலை காப்பகத்திற்கு நட... மேலும் பார்க்க