பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக ந...
திருப்பத்தூர்: மக்கள் அச்சத்தை கவனப்படுத்திய விகடன்; கிணற்றைச் சுற்றி அமைக்கப்பட்ட தடுப்புச்சுவர்!
திருப்பத்தூர் மாவட்டம், குட்டிகாம்ப வட்டம் வாணியம்பாடி அருகே உள்ள ரெட்டியூரில் கிராம சாலையையொட்டி அமைந்திருக்கிறது அந்தக் கிணறு. பள்ளி மாணவர்கள் உட்பட பலரும் நடந்தும், சைக்கிளிலும், வாகனங்களிலும் செல்லும் அந்தச் சாலையின் மிக அருகில், தடுப்புச்சுவர்கூட இல்லாமல் ஆபத்தான நிலையில் இருக்கிறது அந்தக் கிணறு.
இது குறித்து அந்தப் பகுதியில் செல்பவர்களிடம் விசாரித்தபோது, அந்தக் கிணறு சில மாதங்களுக்கு முன்பாகத் தோண்டப்பட்டது தெரியவந்தது. கிணறு, சாலையின் அருகில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பதால், அசம்பாவிதம் ஏதும் நடப்பதற்கு முன்பு நடவடிக்கை வேண்டும் என்றனர், அந்தப் பகுதி மக்கள்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/egtsycol/IMG20240730175747.jpg)
பாதசாரிகளும், பள்ளி மாணவர்களும் தங்கள் அன்றாடப் பணிகளை மேற்கொள்ள அந்த வழியைப் பயன்படுத்திவருகின்றனர். இந்த நிலையில் அந்தக் கிணறு எந்த ஒரு தடுப்பும் இல்லாமல் திறந்தவெளியில் காணப்படுவது அச்சத்தை ஏற்படுத்தியது. அருகில் வீடுகள்கூட இல்லாத நிலையில், ஏதாவது நிகழ்ந்தால், உதவிக்குக்கூட உடனே யாரையும் அழைக்க முடியாத நிலையே இருந்தது.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/ya2x0efg/IMG20250131093048HDR.jpg)
அதுமட்டுமல்லாமல் மழைக்காலங்களில் இந்த இடத்தில் தண்ணீர் தேங்கும் அபாயமும் இருக்கிறது. மழைக்காலத்தில் மேலும் தெளிவில்லாத நிலை ஏற்படும். அப்போது வாகன ஓட்டிகள்கூட தவறி விழ வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.
இது குறித்து ரெட்டியூர் பஞ்சாயத்துத் தலைவர் மூர்த்தியிடம் பேசினோம். ``கடந்த சில மாதங்களுக்கு முன்பாகத்தான் அது தோண்டப்பட்டது. விவசாயத் தேவைகளுக்காக தனிநபரால், தனியார் இடத்தில் தோண்டப்பட்டிருக்கிறது. விபத்து ஏற்படும் வாய்ப்பு இருக்கிறதுதான். இது தொடர்பாக அந்த நபரிடம் பேசி தடுப்புச்சுவர் கட்ட நடவடிக்கை எடுக்கிறோம்’’ என்று கூறினார்.
![](https://gumlet.vikatan.com/vikatan/2025-02-06/yx4v4omq/Picsart25-01-3109-59-24-166.jpg)
இந்த விவகாரம் குறித்து விகடன் தளத்தில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், திருப்பத்தூர்: சாலை ஓரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்படும் கிணறு... ஆபத்தை உணர்வார்களா?! என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை வெளியிட்டிருந்தோம். மேலும் இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட நில உரிமையாளரின் கவனத்திற்குக் கொண்டு சென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். விகடன் செய்தி எதிரொலியாக வெளியூர் சென்றிருந்த உரிமையாளர் ஊர் திரும்பிய பிறகு உடனே விரைந்து ஆபத்தைக் கருத்தில் கொண்டு விரைந்து தடுப்புச் சுவர் கட்டியுள்ளார்.