செய்திகள் :

Rahul Gandhi: `சீனா 10 ஆண்டுகள் முன்னால் செல்கிறது...' - மோடியைச் சாடிய ராகுல்!

post image

பிரதமர் நரேந்திர மோடி தனது நாடாளுமன்ற உரையில் மேக் இன் இந்தியா திட்டம் குறித்து குறிப்பிடாததைச் சுட்டிக்காட்டி, தனது எக்ஸ் தள பக்கத்தில் பாஜக அரசை சாடியுள்ளார் ராகுல் காந்தி.

ராகுல் தனது எக்ஸ் தள பதிவில், "பிரதமரே, உங்கள் நாடாளுமன்ற உரையில் மேக் இன் இந்தியா திட்டத்தைக் குறிப்பிடவே இல்லை. மேக் இன் இந்தியா நல்ல முயற்சியாக இருந்தாலும், தோல்வியடைந்துள்ளது என்பதை பிரதமர் ஒப்புக்கொள்ள வேண்டும்.

நாட்டின் ஜி.டி.பியில் உற்பத்தியின் பங்கு 2014ம் ஆண்டு 15.3 விழுக்காடாக இருந்ததிலிருந்து, 12.6 விழுக்காடாக குறைந்துள்ளது. 60 வருடங்களில் இதுவே மிகக் குறைந்த வீதம்." என எழுதியுள்ளார் ராகுல்.

Make in India

மேலும் வேலைவாய்ப்பின்மையைச் சுட்டிக்காட்டும் விதமாக, "இந்திய இளைஞர்களுக்கு 'வேலை' மிக முக்கிய தேவை. சமீப காலங்களில் எந்த அரசாங்கமும் அது UPA-வாக இருந்தாலும் சரி, NDA-வாக இருந்தாலும் சரி... இந்த தேசிய பிரச்னையை எதிர்கொள்ள முடியவில்லை. நமது உற்பத்தித் துறையை பின்னுக்குத் தள்ளிவைப்பது எது என்பதைக் கண்டறியவும், எதிர்கால உலகப் பொருளாதாரத்தில் போட்டியிடவும் நமக்கு 'தொலைநோக்கு பார்வை' தேவை" எனக் கூறியுள்ளார்.

வேலைகளை உருவாக்குவதில் தொழில்நுட்பங்களின் பங்கை எடுத்துரைக்கும் விதமாக, "இந்தியாவின் உற்பத்தியை அதிகரிக்கும் தொலைநோக்குப் பார்வை, மின்சார மோட்டார்கள், பேட்டரிகள், ஆப்டிக்ஸ் மற்றும் AI போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் குறிப்பிட்ட கவனம் செலுத்த வேண்டும்.

Rahul Gandhi

இதுவே நம் உற்பத்தித்துறையை உயிர்பிக்க ஒரே வழி, அதிநவீன உற்பத்தி திறனை வளர்த்து, நமக்குத் தேவையான வேலைகளை உருவாக்குவோம்." என்றும் எழுதியிருக்கிறார்.

இந்தியா சீனா உடன் போட்டிப்போட நம் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என்கிறார் ராகுல். "சீனா நம்மை 10 ஆண்டுகள் முந்திச் செல்லும்விதமாக வலுவான தொழில்துறை அமைப்பைக் கொண்டுள்ளது. இதுதான் நமக்கு சவால்விடும் தைரியத்தை அவர்களுக்கு வழங்குகிறது. அவர்களுடன் போட்டிப்போட நமக்கிருக்கும் ஒரே வழி நமக்கான உற்பத்தி அமைப்புகளை உருவாக்குவதுதான். அதற்கு தொலைநோக்குப் பார்வையும் உத்தியும் வேண்டும்" எனப் பதிவிட்டுள்ளார் அவர்.

`முருகன் மலையை காப்பாற்றும் போராட்டம்; திமுக அரசுக்கு முதல் அடி விழுந்துள்ளது'- இந்து முன்னணி தலைவர்

திருப்பூரில் நேற்று முன்தினம் காலை கைதுசெய்யப்பட்டதால், இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், ஆர்பாட்டத்துக்கு நீதிமன்றம் அனுமதி அளித்த பிறகு இரவு 8 மணிக்கு மேல்தான் மதுரை வந்தார்.திரு... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம் விவகாரம்: `சிலர் கலவரத்தைத் தூண்ட முயல்கிறார்கள்!' - அமைச்சர் ரகுபதி தாக்கு

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தில் தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வெற்றி தி.மு.க-விற்கு உறுதி செய்யப்பட்ட ... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "மாவட்ட நிர்வாகம் மொத்தமாக தோல்வி அடைந்துள்ளது" - சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு!

"திருப்பரங்குன்றத்து மக்களாலோ, இந்து அறநிலையத்துறை அல்லது தர்கா நிர்வாகத்தாலோ உரிமை சம்பந்தமான பிரச்னை எதுவும் இப்போது எழுப்பப்படவில்லை, பின்னர் பிரச்னையை எழுப்புவது யார்?..." என்று மதுரை நாடாளுமன்ற உ... மேலும் பார்க்க

"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா விரிவான விளக்கம்

கடந்த சில நாட்களாக திருப்பரங்குன்றத்தை மையமாக வைத்து பரபரப்பான சம்பவங்கள் நடந்து வருகின்றன. மதுரையில் இரண்டு நாட்கள் 144 தடை பிறப்பிக்கப்பட்ட நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாட்டை பல்வேறு அரசியல் ... மேலும் பார்க்க

`கொஞ்சநாள் ஊர்ல போய் இருன்னு தலைவர் சொல்லிட்டார்' - வைகோவின் உதவியாளரை விசாரித்த கியூ பிரான்ச்

நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இங்கு, வைகோவின் உதவியாளர் வீட்டுக்கு ... மேலும் பார்க்க

America: அமெரிக்க வெளியேற்றிய இந்தியர்கள்... அமிர்தசரஸில் தரையிறங்கிய சி17 விமானம்!

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள வெளிநாட்டவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற... மேலும் பார்க்க