செய்திகள் :

`கொஞ்சநாள் ஊர்ல போய் இருன்னு தலைவர் சொல்லிட்டார்' - வைகோவின் உதவியாளரை விசாரித்த கியூ பிரான்ச்

post image
நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் மாநிலங்களவையில் குடியரசுத் தலைவர் உரை மீதான விவாதத்தில் இன்று காலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசிக் கொண்டிருந்த அதே நேரத்தில் இங்கு, வைகோவின் உதவியாளர் வீட்டுக்கு சீல்; அவரை கியூ பிராஞ்ச் அதிகாரிகள் விசாரணை என செய்தி சமூக வலைதளங்களில் ஓடிக்கொண்டிருந்தது.

என்ன விவகாரம்? வைகோவிடம் சில வாரங்களுக்கு முன்பு வரை உதவியாளராக இருந்த மதுரையைச் சேர்ந்த ஜெயபிரசாந்திடமே பேசினோம்.

''பத்து வருஷத்துக்கும் மேல தலைவர்கிட்ட உதவியாளரா இருக்கேன். கடந்த நவம்பர் 14ம் தேதி தான் அண்ணன் துரை வைகோ தலைமையில் தான் என் கல்யாணம் நடந்துச்சு.

இப்படியிருக்க ரெண்டு நாளா என்னைப் பற்றி எப்படி இப்படி தப்பான செய்தி கிளம்புச்சுன்னே தெரியலை. நாலு மாசத்துக்கு முன்னாடி கியூ  பிரான்ச் அதிகாரிகள் எனக்குப் போன் பண்ணிருந்தாங்க. அதாவது ரெண்டு இலங்கைத் தமிழர்களைக் கைது செய்ததாகவும், அவங்ககிட்ட என் நம்பர் இருந்ததால என்னைக் கூப்பிட்டாங்க. அந்த ரெண்டு பேரையும் எனக்குத் தெரியும்.

யூ டியூப் சேனல்  நடத்தறோம்னு வந்த அவங்களுக்கு எடிட்டிங் வேலைகளைச் செய்து கொடுத்திருக்கேன். எனக்கு மாசம் ரூ.13,000 தான் சம்பளம். அதனால் சைடுல இந்த மாதிரி சில வேலைகளை ரொம்ப நாளாகவே செய்து தந்துட்டு வரேன்.

வைகோவுடன் ஜெயபிரசாந்த்

அதிகாரிகள் 'இவங்களைத் தெரியுமா'ன்னு கேட்டதும், தெரியும்னு சொன்னதோட, அவங்களுக்கு நான் செஞ்ச வேலைகள் குறித்த விவரங்களையும் கேட்டாங்க. என் கம்ப்யூட்டரை நானே எடுத்து அதிகாரிகள் கிட்டக் கொடுத்துட்டேன்.

அவங்க ரெண்டு பேர் முன்னாடி என்னை விசாரிச்சாங்க. அவங்களும் இவருக்கு எங்களோடு வேறெந்தத் தொடர்பும் இல்லைன்னும் சொல்லிட்டாங்க. இருந்த போதும் ஏன் இப்ப திடீர்னு இப்படி செய்திகள் கிளம்புதுன்னு தெரியல" என்றவர், மேலும் சில விஷயங்களையும் பகிர்ந்தார்.

``கைதான ரெண்டு பேர்ல இலக்கியன்ங்கிறவர் முன்னாடி புலிகள் இயக்கத்துல  இருந்தவர்னு சொல்றாங்க. ஆனா அது பத்தியெல்லாம் எனக்கு எதுவும் தெரியாது. என்னைப் பத்தி ரெண்டு நாளா வந்த செய்தி பத்தி கியூ பிரான்ச் அதிகாரிகள்கிட்டக் கேட்டதுக்கு, 'நாங்க எதுவும் தகவல் கொடுக்கல'ன்னு சொல்லிட்டாங்க. இது யார்  பார்த்த வேலைனு தெரியல" என்கிறார் ஜெயபிரசாந்த்

America: அமெரிக்க வெளியேற்றிய இந்தியர்கள்... அமிர்தசரஸில் தரையிறங்கிய சி17 விமானம்!

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய இந்தியர்களை சி17 ராணுவ விமானம் மூலம் அமெரிக்க அரசு இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக குடியேறியுள்ள வெளிநாட்டவரை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற... மேலும் பார்க்க

திருப்பரங்குன்றம்: "பக்தர்கள் மேல கை வச்சா நீங்க இருக்க மாட்டிங்க..." - அண்ணாமலை பரபரப்புப் பேட்டி

திருப்பரங்குன்றம் விவகாரத்தின் பரபரப்பு அடங்கி, இன்று முதல் பக்தர்கள் கோயில், தர்காவிற்குச் செல்ல அனுமதி வழங்கியுள்ளது காவல்துறை.இருப்பினும், சிறிது நாள்களுக்குச் சர்ச்சைகளைத் தவிர்ப்பதற்கு கட்சி, அமை... மேலும் பார்க்க

'அயோத்தியில் கலவரத்தை முடிச்சிட்டு, திருப்பரங்குன்றத்தில ஆரம்பிச்சுருக்காங்க'- செல்வப்பெருந்தகை

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.இது தொடர்பாகப் பேசிய அவர், “மத நல்லிணக்கத்தை கெடுப்பதற்காக ஒரு கும்பல்... மேலும் பார்க்க

``கிளாம்பாக்கத்தில் 18 வயது பெண்ணுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை..." - அண்ணாமலை கண்டனம்

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, கிளம்பாக்கத்தில் பேருந்துக்காகக் காத்திருந்த பெண் ஆட்டோவில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்ட சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாட்டில் பாலியல் ... மேலும் பார்க்க

Kumbh Mela: மகா கும்பமேளாவில் பிரதமர் மோடி... திரிவேனி சங்கமத்தில் புனித நீராடல்!

கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் மோடி!கும்ப மேளா நிகழ்வில் பிரதமர் ம... மேலும் பார்க்க

‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும்..!’ - லீக்கான சீக்ரெட் ரிப்போர்ட்; பிரிட்டன் அரசுக்கு அச்சுறுத்தலா?

‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’‘இந்து தேசியமும் காலிஸ்தானியமும் இங்கிலாந்தின் புதிய அச்சுறுத்தல்’ என்ற மையத் தகவலுடன், பொதுவெளியில் லீக் ஆன பிரிட்டன் உள்துறை அலுவலக ... மேலும் பார்க்க