செய்திகள் :

Kerala Lottery: கண்ணூரில் விற்பனையான லாட்டரிக்கு ரூ.20 கோடி பரிசு; அதிஷ்டசாலியை தேடும் அரசு!

post image

கிறிஸ்துமஸ் -புத்தாண்டு லாட்டரி குலுக்கல்

கேரள மாநில அரசு லாட்டரித்துறை மூலம் லாட்டரிச்சீட்டுகளை விற்பனை செய்து வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பம்பர் பரிசுக்காக 50 லட்சம் லாட்டரி சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு விற்பனைசெய்யப்பட்டு வந்தன. இன்று மதியம் 12 மணிவரை லாட்டரிச் சீட்டுகள் விற்பனைச் செய்யப்பட்டன. 20 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான இந்த லாட்டரி டிக்கெக் 400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. 47 லட்சம் லாட்டரிச் சீட்டுகள் விற்பனையாகி உள்ளன. கிறிஸ்துமஸ் -புத்தாண்டு லாட்டரி  குலுக்கல் இன்று இன்று மதியம்  2 மணிக்கு திருவனந்தபுரத்தில் உள்ள லாட்டரித்துறை தலைமை அலுவலகமான கார்கி பவனின் நடைபெற்றது.

லாட்டரி குலுக்கல் நிகழ்ச்சிக்கு முன் கேரள நிதி அமைச்சர் கே.என்.பாலகோபால் பேசுகிறார்

பம்பர் பரிசு

முதல் பரிசான 20 கோடி ரூபாய்க்கான பம்பர் பரிசு XD 387132 என்ற எண் கொண்ட லாட்டரி சீட்டுக்கு கிடைத்துள்ளது. அந்த லாட்டரி சீட்டு கண்ணூர் பகுதியில் விற்பனை ஆனது தெரிய வந்தது. அதே சமயம் லாட்டரிச்சீட்டு வாங்கிய அதிஷ்டசாலி யார் என்ற விபரம் இன்னும் வெளியாகவில்லை.

இரண்டாம் பரிசாக ஒரு கோடி ரூபாய்வீதம் 20 நபர்களுக்கு வழங்கப்படுகிறது. மூன்றாம் பரிசாக 10 லட்சம் ரூபாய் வீதம் 30 பேருக்கும் வழங்கப்படுகிறது. பம்பர் பரிசுத்தொகையான 20 கோடி ரூபாய் பரிசு வென்றவருக்கு வரிகள், ஏஜெண்ட் கமிஷன் உள்ளிட்ட பிடித்தங்கள் போக 12.6 கோடி ரூபாய் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்.

`நம்பிக்கை ஒன்றுதான் பிரதானம்' - கேரள நிதித்துறை அமைச்சர்

லாட்டரி குலுக்கல் நிகழ்சியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட கேரள நிதித்துறை அமைச்சர் கே.என்.பாலகோபால் பேசுகையில், "சம்மர் பம்பர் லாட்டரியின் தொடக்கவிழாவுடன் கிறிஸ்துமஸ் பம்பர் லாட்டரிக்கான குலுக்கலும் நடைபெற்றது. கேரளா லாட்டரி இந்தியாவில் மிகவும் பிரபலமான லாட்டரியாகும். பிற மாநிலங்களில் உள்ளவர்களும் இது எப்படி சரியான முறையில் நடைபெறுகிறது என அறிந்துகொள்ளும் விதமாக விசாரித்துவருகின்றனர். நம்பிக்கை ஒன்றுதான் கேரளா லட்டரியின் பிரதானமாக உள்ளது. நூறு சதவிகிதம் மிகச்சரியாக இந்த லாட்டரியை அரசு நடத்துகிறது. வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகளை சரியான முறையில் வழங்குகிறோம்.

சம்மர் பம்பர் பரிசுக்கான லாட்டரிச்சீட்டு விற்பனையை தொடங்கிவைத்த அமைச்சர் கே.என்.பாலகோபால்

ஒரு லட்சத்துக்கும் அதிகமான ஏஜெண்டுகள் உள்ளனர். அதைவிட பல மடங்கு விற்பனை பிரதிநிதிகளும் உள்ளனர். அவர்களுக்கும் வருவாய் கிடைக்கின்றன. மாநிலத்துக்கும் அதிக வருவாய் வருகிறது. பம்பர் பரிசுகள் மட்டும் அல்ல இரண்டாம் பரிசுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதற்கு லாட்டரி துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் நல்ல ஒத்துழைப்பு வழங்குகின்றன. இன்னும் அதிகம்பேருக்கு பரிசுகள் கிடைக்கட்டும் என வாழ்த்துகிறேன்" என்றார்.

20 கோடி ரூபாய் பம்பர் பரிசுக்கான லாட்டரிச் சீட்டை விற்பனைசெய்த ஏஜெண்ட் அனீஷ் கூறுகையில், "எனக்கு வெறும் மகிழ்ச்சி அல்ல, இரட்டிப்பு மகிழ்ச்சியாக உள்ளது. ஒலிம்பிக் மெடல், ஆஸ்கார் விருது பெற்றது போன்ற மகிழ்ச்சியில் உள்ளேன். சத்தியன் என்பவர் பில் செலுத்தி அந்த டிக்கெட்டை வங்கியுள்ளார். அவர் விற்பனையாளரா அல்லது வாடிக்கையாளரா என்பது தெரியவில்லை." என்றார்.

'துரைமுருகனிடமிருந்து கனிமவளத்துறையை பறிக்க வேண்டும்!' - கொந்தளிக்கும் லாரி உரிமையாளர்கள்!

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று சில முக்கியமான விஷயங்களை பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருந்தார்கள். கனிமவளக் கொள்ளை சம்பந்தமாக பேசிய அவர்கள், 'கனிமவளத்துறையை... மேலும் பார்க்க

Ajith Kumar : 'அப்பா நீங்கள் இப்போது இருந்திருக்க வேண்டும்..' - அஜித் நெகிழ்ச்சி

நடிகர் அஜித்துக்கு மத்திய அரசின் பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், அஜித் உணர்வுப்பூர்வமாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்.Ajith Kumarஅஜித் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், 'இந... மேலும் பார்க்க

Union Budget 2025: 'வேண்டும்!' - சிறு, குறு தொழிலாளர்களுக்கு திட்டங்கள் வேண்டும் - காரணம் என்ன?!

அந்நிய செலாவணி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கிய பங்காற்றுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, இந்தியாவில் ஏற்றுமதியை விட, இறக்குமதி அதிகம் நடக்கிறது. அதனால், நம் கையில் இருக்கும் அந்நிய செலாவணி கு... மேலும் பார்க்க

Hindenburg: 'ஆன்சன் நிறுவனத்துடன் இணைந்து செயல்பாடு' - வசமாக சிக்கிய ஹிண்டன்பர்க் ஆண்டர்சன்?

கடந்த வாரம் ஹிண்டன்பர்க் நிறுவனத்தை கலைக்கப்போவதாக அறிவித்த அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் மீது தற்போது வழக்கு ஒன்று பாய்ந்துள்ளது. கனடாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில், சந்தை மோசடி சம்பந்தமான வழக்கு ஒன்றில... மேலும் பார்க்க

Dubai: துபாய்க்கு பயணம் செய்யும் அல்லது பிளான் இருக்கும் இந்தியரா நீங்கள்?- இனி 'இது' உங்களுக்கு ஈஸி

இந்தியாவின் UPI ஐக்கிய அமீரகத்தின் மாக்னட்டி (அந்த நாட்டு UPI போன்றது) உடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது என்று NPCI சர்வதேச பேமெண்ட் லிமிடட் அறிவித்துள்ளது.அதன் படி, துபாய் உள்ளிட்ட ஐக்கிய அமீரக நாடுகளுக... மேலும் பார்க்க