செய்திகள் :

இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன்ஏஐ நிறுவனம் ஆலோசனை!

post image

நாட்டின் சாலை வரைபடங்கள் குறித்து இந்திய புத்தாக்க நிறுவனத் தலைவர்களுடன் ஓபன் ஏஐ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆலோசனை மேற்கொண்டார்.

மேலும், இந்த ஆலோசனையில் இந்திய சந்தைக்கான சேட்ஜிபிடி பற்றிய தயாரிப்பாளர்களின் திட்டங்கள் குறித்தும் விவாதித்தனர்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை தலைமையிடமாகக் கொண்டு ஓபன்ஏஐ என்ற செய்யறிவு திறன் ஆராய்ச்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன், இந்திய சாலை வரைபடங்கள் குறித்து நாட்டின் முன்னணி புத்தாக்க நிறுவனங்களின் தலைவர்களுடன் இன்று (பிப். 5) ஆலோசனை நடத்தினார்.

இதில், ஆல்ட்மேன் உடன் பேடிஎம் தலைமை செயல் அதிகாரி விஜய் சேகர் சர்மா, அன்அகாதெமியின் தலைமை செயல் அதிகாரி கெளரவ் முன்ஜால், ஸ்நாப்டீல் துணை நிறுவனர் குணால் பாஹல், சாயோஸ் துணை நிறுவனர் ராகவ் வெர்மா, லிக்ஸிகோ குழுவின் தலைமை செயல் அதிகாரி அலோக் பாஜ்பாய், ஹாப்டிக் தலைமை செயல் அதிகாரி ஆக்ரித் வைஷ், ஹெல்திஃபை மீ நிறுவனத்தின் துஷார் வஷிஷ்த் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உலக அளவில் பல்வேறு மொழிகளில் செய்யறிவு குறித்த விவாதம் நடந்துகொண்டிருக்கும் வேளையில், இந்தியாவுக்கு சாம் ஆல்ட்மேன் இந்தியாவுக்கு வருகைத் தரவுள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் செய்யறிவு பயன்பாட்டிற்காக இன்னும் நிறைய பணிகளைச் செய்ய வேண்டும்; எதிர்பார்ப்புகள் நிறைந்த மாதங்கள் அடுத்தடுத்து வரவுள்ளன என ஹாப்டிக் தலைமை செயல் அதிகாரி ஆத்ரித் வைஷ் பதிவிட்டுள்ளார்.

ஆல்ட்மேன் உடனான விவாதம் ஆரோக்கியமானதாகவும் பயனுள்ளதாகவும் இருந்ததாக கெளரவ் முன்ஜால் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க | காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும்: அமித் ஷா

தீவிரவாதத்துக்கு எதிரான போராட்டம் எல்லைகளில் ஊடுருவல் இல்லாத நிலையை எட்ட வேண்டும் என மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா இன்று (பிப். 5) தெரிவித்தார். ஜம்மு - காஷ்மீர் எல்லைப் பாதுகாப்பு குறித்து தில்லி... மேலும் பார்க்க

போக்குவரத்து விதிமீறல் அபராதத் தொகை ரூ.17 லட்சம் கையாடல்: பெண் காவலர் பணி இடைநீக்கம்

பனாஜி : கோவா காவல் துறையில் தலைமைக் கான்ஸ்டபிள் ஆக பணியாற்றி வந்த பெண் காவலர் ஒருவர், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டோரிடருந்து வசூலிக்கப்பட்ட ரூ.17 லட்சம் பணத்தை கையாடல் செய்த குற்றத்துக்காக பணியிலி... மேலும் பார்க்க

தில்லியில் ஆட்சி மாறுகிறதா? கருத்துக் கணிப்பு முடிவுகள்!

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளன. மேலும் பார்க்க

இந்து நெறிமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்கள் நீக்கம்: திருப்பதி தேவஸ்தானம்!

இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றாத 18 ஊழியர்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நீக்கியுள்ளது. நீக்கப்பட்டவர்களுக்கு விருப்ப ஓய்வு அல்லது அவர்கள் விரும்பினால் அரசின் பிற துறைகளில் பணி புரிய தேவஸ்தானம் தனத... மேலும் பார்க்க

அமெரிக்க ராணுவ விமானம் தரையிறங்க அமிர்தசரஸ் தேர்வு செய்யப்பட்டது ஏன்?

சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களுடன் அமெரிக்க ராணுவ விமானம், பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் இன்று பகல் 2 மணிக்கு தரையிறங்கியது. ஆனால், தலைநகர் புது தில்லியில் இந்த விமானம் தரையிறங்காமல் அமிர்தசரஸ் தே... மேலும் பார்க்க

தில்லியில் வாக்குப்பதிவு நிறைவு!

தலைநகர் தில்லியில் மாலை 5 மணி நிலவரப்படி 57.70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.காலை மந்தமாக நடைபெற்றுவந்த வாக்குப் பதிவு, பிற்பகலில் அதிகரிக்கத் தொடங்கியதால், வாக்கு வி... மேலும் பார்க்க