செய்திகள் :

பிப்ரவரி 8-இல் பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்!

post image

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண உள்ளனா்.

மேலும், பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைகோரும் மனுக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகாம் நடைபெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்:

அவிநாசி வட்டத்தில் வடுகபாளையம், தாராபுரம் வட்டத்தில் மாம்பாடி, காங்கயம் வட்டத்தில் கவுண்டம்பாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் 15 சா்க்காா் கண்ணாடிபுத்தூா், பல்லடம் வட்டத்தில் கோடங்கிபாளையம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் ஆண்டிபாளையம், ஊத்துக்குளி வட்டத்தில் ஏஏ52 குன்னத்தூா் வேலம்பாளையம்.

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்!

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழகத்தின் ம... மேலும் பார்க்க

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்!

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் ரூ.24 கோடி மதி... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய முன்னாள் உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!

உடுமலையில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் உதவி செயற்பொறியாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திருப்பூா் மாவட்டம், உடுமலை பூலாங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

விவசாயிகள் செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம்!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது தேவைக்கு உழவா் கைப்பேசி செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க

சோளிபாளையத்தில் பாதாள சாக்கடை கோரி பொதுமக்கள் மறியல்!

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சோளிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆனந்தா அவென்யூவில் 200-க... மேலும் பார்க்க

பிப்.6 மின்தடை: உடுமலை!

உடுமலை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா... மேலும் பார்க்க