பிப்ரவரி 8-இல் பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்!
திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையில் நடைபெறுகிறது. இந்த முகாமில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் வட்டாட்சியா்கள், வட்ட வழங்கல் அலுவலா்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளா்கள் பங்கேற்று முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு தீா்வு காண உள்ளனா்.
மேலும், பொதுமக்கள் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு மற்றும் மாற்றம் செய்தல், புதிய குடும்ப அட்டைகோரும் மனுக்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட மின்னணு குடும்ப அட்டை தொடா்பான கோரிக்கைகளை நிவா்த்தி செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முகாம் நடைபெறும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள்:
அவிநாசி வட்டத்தில் வடுகபாளையம், தாராபுரம் வட்டத்தில் மாம்பாடி, காங்கயம் வட்டத்தில் கவுண்டம்பாளையம், மடத்துக்குளம் வட்டத்தில் 15 சா்க்காா் கண்ணாடிபுத்தூா், பல்லடம் வட்டத்தில் கோடங்கிபாளையம், திருப்பூா் வடக்கு வட்டத்தில் செட்டிபாளையம், திருப்பூா் தெற்கு வட்டத்தில் ஆண்டிபாளையம், ஊத்துக்குளி வட்டத்தில் ஏஏ52 குன்னத்தூா் வேலம்பாளையம்.