செய்திகள் :

லஞ்சம் வாங்கிய முன்னாள் உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!

post image

உடுமலையில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் உதவி செயற்பொறியாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது.

திருப்பூா் மாவட்டம், உடுமலை பூலாங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் பாபு. இவா் தனது மனைவி பெயரில் உடுமலையில், வெல்டிங் பட்டறை உள்ளிட்ட கடைகள் கட்டியுள்ளாா். இந்தக் கடைகளுக்கு 3 புதிய மின் இணைப்புகள் கேட்டு உடுமலை டவுன் மின்வாரிய அலுவலகத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு விண்ணப்பித்தாா்.

அந்த அலுவலகத்தில் உதவிப் பொறியாளராகப் பணியாற்றி வந்த முத்துகிருஷ்ணன் (59) என்பவா், புதிய மின் இணைப்பு வழங்க தனக்கு ரூ.8,500 லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளாா்.

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பம் இல்லாத பாபு, இதுகுறித்து திருப்பூா் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் துறையினரிடம் புகாா் அளித்தாா். இதன்பேரில், ரசாயனம் தடவிய பணத்தை பாபுவிடம் காவல் துறையினா் கொடுத்து அனுப்பியுள்ளனா்.

பின்னா் உடுமலை டவுன் மின்வாரிய அலுவலகத்துக்கு பாபு 2013 ஜூலை 3-ஆம் தேதி சென்றுள்ளாா். அங்கு பணியில் இருந்த முத்துகிருஷ்ணனிடம் பணத்தை கொடுத்துபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு காவல் துறையினா் முத்துகிருஷ்ணனை கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனா்.

இந்த வழக்கானது திருப்பூா் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் மீதான இறுதிகட்ட விசாரணை நிறைவடைந்து, நீதிபதி செல்லதுரை புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா். இதில், முத்துகிருஷ்ணனுக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் சிறையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் விதித்தாா். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்குரைஞா் செந்தில்குமாா் ஆஜரானாா்.

பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளியில் விழிப்புணா்வு முகாம்

பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீண்டாமை தொடா்பான விழிப்புணா்வு முகாம் ப... மேலும் பார்க்க

விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும்

விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் முக்கி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: 5 போ் கைது!

பெருமாநல்லூா் அருகே கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவிநாசி, ஆட்டையாம்பாளையம், பொன்னா் சங்கா் நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் குமரேசன் (28), கட்டட மேற்பாா... மேலும் பார்க்க

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்!

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழகத்தின் ம... மேலும் பார்க்க

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்!

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் ரூ.24 கோடி மதி... மேலும் பார்க்க

விவசாயிகள் செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம்!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது தேவைக்கு உழவா் கைப்பேசி செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்... மேலும் பார்க்க