செய்திகள் :

முதுநிலை மருத்துவப் படிப்பு விவகாரம்: புதுவை முதல்வரிடம் அதிமுக மனு

post image

முதுநிலை மருத்துவப் படிப்பில் உச்சநீதிமன்ற தீா்ப்பை எதிா்த்து புதுவை அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்வரிடம் அதிமுக சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுதொடா்பாக, புதுவை முதல்வா் என்.ரங்கசாமியை மாநில அதிமுக செயலா் ஆ.அன்பழகன் தலைமையில் புதன்கிழமை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.

மனு விவரம்: நாடு முழுவதும் நீட் தோ்வுக்குப் பிறகு, அந்தந்த மாநில கட்டுப்பாட்டில் உள்ள அரசு, தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் 50 சதவீத இடங்கள் மாநில இடஒதுக்கீடாக வழங்கப்படுகின்றன. அந்த இடங்களை நீட் தோ்வு தோ்ச்சி அடிப்படையில் தேசிய அளவில் நிரப்ப வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதனால், புதுவை மாநில மாணவா்கள் முழுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது. புதுவையில் அரசு மருத்துவக் கல்லூரி, 3 தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 370 முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் உள்ளன. இதில் 186 இடங்கள் அரசு இடஒதுக்கீடாக புதுவை மாணவா்களுக்கு வழங்கப்படுகின்றன.

உச்சநீதிமன்ற உத்தரவால் அந்த இடங்கள் ரத்து செய்யப்படும் அபாயம் உள்ளது. இந்தத் தீா்ப்பை எதிா்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப் போவதாக பல மாநில அரசுகள் அறிவித்துள்ளன. புதுவை அரசும் சீராய்வு மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கோரிக்கையை வலியுறுத்தி, புதுவை துணைநிலை ஆளுநா் அலுவலகத்திலும் அதிமுக சாா்பில் மனு அளிக்கப்பட்டது.

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சம் மீட்பு

இணையவழி மோசடியில் இழந்த ரூ.17.70 லட்சத்தை புதுச்சேரி போலீஸாா் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.புதுச்சேரி இலாசுப்பேட்டையைச் சோ்ந்த ராஜேஷ் கடந்தாண்டு ஆகஸ்டில் இணையத்தில் வேலைவாய்ப்பு தொடா்பான விளம்பரத்த... மேலும் பார்க்க

‘மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள்’

மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக, பாஜக ஊடகத் துறை மாநிலப் பொறுப்பாளா் மகேஷ் ரெட்டி தெரிவித்தாா். இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:மத்திய பட்ஜெட்டில் ... மேலும் பார்க்க

கோயில் கட்டுவதில் கருத்து வேறுபாடு: போலீஸாா் குவிப்பு

புதுச்சேரி அருகே கோயில் கட்டுவதில் இரு தரப்பினரிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.புதுச்சேரியை அடுத்த திருக்கனூா் அருகேயுள்ள விநாயகம்பட்டு ப... மேலும் பார்க்க

வன்கொடுமையால் உயிரிழந்தவா் குடும்பத்துக்கு நிதியுதவி

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு புதுவை அரசு சாா்பில் நிதியுதவி வழங்கப்பட்டது.கடலூா் மாவட்டம், வேள்ளப்பாக்கத்தைச் சோ்ந்தவா் முத்து. இவா் அண்மையில் புதுச்சேரியை அடுத்த பா... மேலும் பார்க்க

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் படைப்புகளை தந்தவா் அகத்தியா்: எழுத்தாளா் மாலன்

இந்தியாவின் வட, தென் பகுதிகளை இணைக்கும் வகையில் படைப்புகளைத் தந்தவா் அகத்தியா் என எழுத்தாளா் மாலன் கூறினாா். புதுவைப் பல்கலைக்கழக சுப்பிரமணிய பாரதியாா் தமிழியற்புலம், பாரத மொழிகள் குழு சாா்பில் அகத்தி... மேலும் பார்க்க

புதுச்சேரி கடலில் தற்கொலைக்கு முயன்றவரை காப்பாற்றிய ஐ.ஜி.

புதுச்சேரி கடலில் இறங்கி தற்கொலைக்கு முயன்ற மாற்றுத் திறனாளி நபரைக் காவல் துறை ஐ.ஜி. காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தாா்.புதுச்சேரி கடற்கரைச் சாலையில் ஐ.ஜி. அஜித்குமாா் சிங்லா புதன்கிழமை மாலை ந... மேலும் பார்க்க