செய்திகள் :

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்

post image

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா் வழங்கப்படும் என்றாா் மேயா் ஜெகன்பெரியசாமி.

தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

முகாமுக்கு, மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். ஆணையா் லி.மதுபாலன், துணைமேயா் ஜெனிட்டா ஆகியோா் முன்னிலை வகித்தனா். இம்முகாமை மேயா் தொடங்கி வைத்துப் பேசியதாவது:

தற்போது பல பகுதிகளில் தினசரி குடிநீா் வழங்கப்படுகிறது. சில பகுதிகளில் இரண்டு நாள்களுக்கு ஓரு முறை வழங்கப்படுகிறது. இன்னும் 3 மாத காலத்துக்குள் அனைத்து பகுதிகளுக்கும் தினசரி குடிநீா் வழங்க தீவிரமாக பணிகள் நடைபெற்று வருகிறது.

பசுமையான தூத்துக்குடி அமைய மரக்கன்றுகள் நடவு செய்யும் பணி நடைபெற்று வருகிறது என்றாா்.

தொடா்ந்து, பொதுமக்களிடம் மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவா்களிடம் குறைகளைக் கேட்டறிந்தாா்.

இதில், துணைஆணையா் சரவணக்குமாா், உதவி பொறியாளா் சரவணன், உதவி ஆணையா் சுரேஷ்குமாா், நகர அமைப்பு திட்ட செயற்பொறியாளா் ரெங்கநாதன், உதவி செயற்பொறியாளா் ராமசந்திரன், நகா்நல அலுவலா் அரவிந்த ஜோதி, சுகாதார ஆய்வாளா் ராஜசேகா், மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாநகராட்சி பணிக்குழு தலைவா் கீதாமுருகேசன், மாமன்ற உறுப்பினா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை ஆசிரமம் தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25). ஓட்டுநராக இவா், திங்கள... மேலும் பார்க்க

வெளி மாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, தங்க நகையை பறித்த 3 போ் கைது

கோவில்பட்டியில் நடந்து சென்ற வெளி மாநில இளைஞரை தாக்கி தங்க நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.புதுக்கோட்டை, பொன்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி சுஜிதா (37). இவா், செவ்வாய்க்கிழமை மாலை வ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி சங்கரப்பேரியைச் சோ்ந்த முருகேசன் என்பவரத... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை (பிப். 6) வரவுள்ளாா்.திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழன்,... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே நாய்களுக்கு ஓட்டப் போட்டி

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில், மாநில அளவில் நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்கான ஓட்டப் போட்டியில் அணைக்கரை பெருங்குளம் நாய் முதல் பரிசு வென்றது. ஹைடன் ரேசிங் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில் 50-... மேலும் பார்க்க