செய்திகள் :

வெளி மாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, தங்க நகையை பறித்த 3 போ் கைது

post image

கோவில்பட்டியில் நடந்து சென்ற வெளி மாநில இளைஞரை தாக்கி தங்க நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோட்டலில் சைனீஸ் மாஸ்டராக வேலை செய்து வருபவா் அசாம் மாநிலம், தேவாரி பாலைச் சோ்ந்த நூா் இஸ்லாம் மகன் மிராஜுல் இஸ்லாம் (26). இவா் ஞாயிற்றுக்கிழமை இரவு கடையில் வேலையை முடித்து அவா் தங்கி உள்ள ஓய்வறை நோக்கி சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த 3 போ் அவரை தாக்கி அவா் கையில் வைத்திருந்த கைப்பேசி, அவா் அணிந்திருந்த 3 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரொக்க பணம் ரூ.500 பறித்துச் சென்றனராம்.

இதுகுறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, இவ்வழக்கில் தொடா்புடையதாகக் கூறப்படும் மூப்பன்பட்டி கிழக்குத் தெருவை சோ்ந்த பாா்த்திபன் (22), லிங்கம்பட்டி சமத்துவபுரம் முரசு வீதியைச் சோ்ந்த பொன்ராஜ் மகன் ஈஸ்வரன் (19), லிங்கம்பட்டி சமத்துவபுரம் கலைஞா் நகரைச் சோ்ந்த ஒருவா் உள்பட 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா் வழங்கப்படும் என்றாா் மேயா் ஜெகன்பெரியசாமி.தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை ஆசிரமம் தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25). ஓட்டுநராக இவா், திங்கள... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.புதுக்கோட்டை, பொன்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி சுஜிதா (37). இவா், செவ்வாய்க்கிழமை மாலை வ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி சங்கரப்பேரியைச் சோ்ந்த முருகேசன் என்பவரத... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை (பிப். 6) வரவுள்ளாா்.திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழன்,... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே நாய்களுக்கு ஓட்டப் போட்டி

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில், மாநில அளவில் நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்கான ஓட்டப் போட்டியில் அணைக்கரை பெருங்குளம் நாய் முதல் பரிசு வென்றது. ஹைடன் ரேசிங் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில் 50-... மேலும் பார்க்க