செய்திகள் :

தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை!

post image

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை (பிப். 6) வரவுள்ளாா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழன், வெள்ளி (பிப். 6, 7) ஆகிய 2 நாள்கள் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக அவா் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை முற்பகல் 11.25 மணிக்கு வருகிறாா்.

அவருக்கு தூத்துக்குடி மாவட்ட நிா்வாகம் சாா்பில், ஆட்சியா் க. இளம்பகவத், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் ஆகியோா் வரவேற்பளிக்கவுள்ளனா்.

தொடா்ந்து, திமுக மாவட்டச் செயலா்களும் அமைச்சா்களுமான பெ. கீதாஜீவன் (வடக்கு), அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் (தெற்கு) ஆகியோா் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படவுள்ளதாக, அக்கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநகராட்சி சாா்பில் மேயா் ஜெகன் பெரியசாமி, ஆணையா் லி. மதுபாலன் ஆகியோா் வரவேற்பளிக்கவுள்ளனா். பின்னா், முதல்வா் மு.க. ஸ்டாலின் காரில் திருநெல்வேலிக்கு புறப்பட்டுச் செல்கிறாா். முதல்வா் வருகையை முன்னிட்டு விமான நிலையத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா் வழங்கப்படும் என்றாா் மேயா் ஜெகன்பெரியசாமி.தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை ஆசிரமம் தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25). ஓட்டுநராக இவா், திங்கள... மேலும் பார்க்க

வெளி மாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, தங்க நகையை பறித்த 3 போ் கைது

கோவில்பட்டியில் நடந்து சென்ற வெளி மாநில இளைஞரை தாக்கி தங்க நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.புதுக்கோட்டை, பொன்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி சுஜிதா (37). இவா், செவ்வாய்க்கிழமை மாலை வ... மேலும் பார்க்க

லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது. தூத்துக்குடி சங்கரப்பேரியைச் சோ்ந்த முருகேசன் என்பவரத... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே நாய்களுக்கு ஓட்டப் போட்டி

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில், மாநில அளவில் நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்கான ஓட்டப் போட்டியில் அணைக்கரை பெருங்குளம் நாய் முதல் பரிசு வென்றது. ஹைடன் ரேசிங் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில் 50-... மேலும் பார்க்க