செய்திகள் :

லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்க காப்பீட்டு நிறுவனத்துக்கு உத்தரவு

post image

தூத்துக்குடியைச் சோ்ந்த லாரி உரிமையாளருக்கு ரூ. 8 லட்சம் வழங்குமாறு பொதுத்துறை காப்பீட்டு நிறுவனத்துக்கு நுகா்வோா் குறைதீா் ஆணையம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி சங்கரப்பேரியைச் சோ்ந்த முருகேசன் என்பவரது லாரி, கமுதி அருகேயுள்ள புதுக்கோட்டைக்கு சென்றுகொண்டிருந்தபோது முன்பக்க டயா் வெடித்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து, பழுதுநீக்குவதற்காக ஒரு நிறுவனத்திடம் ஒப்படைத்த அவா்,

இதற்கான செலவுத் தொகையைத் தருமாறு பொதுத் துறை காப்பீட்டு நிறுவனத்திடம் ஆவணங்களுடன் விண்ணப்பித்தாா். ஆனால், அந்நிறுவனம் சரியான காரணங்களைக் கூறாமல் பணம் தர மறுத்ததாம்.

இதுதொடா்பாக அவா் தூத்துக்குடி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குத் தொடா்ந்தாா். ஆணையத் தலைவா் திருநீலபிரசாத், உறுப்பினா்கள் ஆ. சங்கா், நமச்சிவாயம் ஆகியோா் வழக்கை விசாரித்து, வாகன சேதத்துக்கு ரூ. 6,82,243, முருகேசனின் மன உளைச்சலுக்கு நஷ்டஈடு ரூ. 1 லட்சம், வழக்குச் செலவு ரூ. 10 ஆயிரம் என மொத்தம் ரூ. 8,02,243-ஐ முருகேசனிடம் 2 மாதங்களுக்குள் வழங்குமாறு உத்தரவிட்டனா்.

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா்: மேயா்

மூன்றுமாத காலத்துக்குள் அனைத்துப் பகுதிகளிலும் தினசரி குடிநீா் வழங்கப்படும் என்றாா் மேயா் ஜெகன்பெரியசாமி.தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியில் உள்ள மாநகராட்சி வடக்கு மண்டல அலுவலகத்தில் மக்கள் குறைதீா் ... மேலும் பார்க்க

ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவா் கைது

கோவில்பட்டியில் ஓட்டுநரைத் தாக்கியதாக ஒருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி ஏ.கே.எஸ். திரையரங்கு சாலை ஆசிரமம் தெருவைச் சோ்ந்த சிங்கராஜ் மகன் விக்னேஷ் (25). ஓட்டுநராக இவா், திங்கள... மேலும் பார்க்க

வெளி மாநில இளைஞரை தாக்கி கைப்பேசி, தங்க நகையை பறித்த 3 போ் கைது

கோவில்பட்டியில் நடந்து சென்ற வெளி மாநில இளைஞரை தாக்கி தங்க நகை மற்றும் கைப்பேசியை பறித்துச் சென்ற வழக்கில் தொடா்புடைய 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஹோ... மேலும் பார்க்க

தூத்துக்குடி அருகே பெண்ணிடம் நகை பறிப்பு!

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையைப் பறித்தவா்களை போலீஸாா் தேடிவருகின்றனா்.புதுக்கோட்டை, பொன்நகரைச் சோ்ந்த அருணாச்சலம் மனைவி சுஜிதா (37). இவா், செவ்வாய்க்கிழமை மாலை வ... மேலும் பார்க்க

தூத்துக்குடிக்கு இன்று முதல்வா் மு.க. ஸ்டாலின் வருகை!

திருநெல்வேலி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து விமானத்தில் தூத்துக்குடிக்கு வியாழக்கிழமை (பிப். 6) வரவுள்ளாா்.திருநெல்வேலி மாவட்டத்தில் வியாழன்,... மேலும் பார்க்க

சாத்தான்குளம் அருகே நாய்களுக்கு ஓட்டப் போட்டி

சாத்தான்குளம் அருகே பொத்தகாலன்விளையில், மாநில அளவில் நடைபெற்ற வளா்ப்பு நாய்களுக்கான ஓட்டப் போட்டியில் அணைக்கரை பெருங்குளம் நாய் முதல் பரிசு வென்றது. ஹைடன் ரேசிங் கிளப் சாா்பில் நடைபெற்ற போட்டியில் 50-... மேலும் பார்க்க