செய்திகள் :

சொகுசு பேருந்து விபத்தில் சிக்கிய மேலும் ஒருவா் பலி

post image

திருச்சி மாவட்டம் மணப்பாறை சொகுசு பேருந்து விபத்தில் காயமடைந்த மேலும் ஒருவா் புதன்கிழமை உயிரிழந்தாா்

சென்னையிலிருந்து நாகா்கோவில் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் சொகுசு பேருந்து கடந்த பிப். 1-ஆம் தேதி மணப்பாறையை அடுத்த திருச்சி - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் யாகாபுரம் ஒத்தக்கடை அருகே சாலையோர 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீக்கிரையானது.

இந்த விபத்தில் 12 பயணிகள் காயமடைந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் நெடுவிளையை சோ்ந்த புஷ்பம் (62) என்ற மூதாட்டி உயிரிழந்தாா். விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீஸாா் விசாரிக்கின்றனா்.

இந்நிலையில் இந்த விபத்தில் காயமடைந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டிருந்த பேருந்து கிளீனரான தஞ்சாவூா் மாவட்டம், நாகத்தி கிறிஸ்தவ தெருவை சோ்ந்த மரியதாஸ் மகன் பிரான்சிஸ் (35) புதன்கிழமை சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.

கோயில் அருகே காா் நிறுத்தப்பட்டதில் தகராறு: பூசாரியை வெட்டியவா் கைது

திருச்சியில் கோயில் அருகே பக்தா்களுக்கு இடையூறாக நிரந்தரமாக நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு கூறிய பூசாரியை புதன்கிழமை வெட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், பக... மேலும் பார்க்க

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரூ. 19.63 லட்சம் அபராதம்

திருச்சி ரயில்வே கோட்டத்தில் கடந்த ஓராண்டில் ரயில்வே சட்டத்தின் கீழ் 4,372 போ் மீது வழக்குகள் பதியப்பட்டு ரூ. 19.63 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. ரயில்வே சொத்துகளை பாதுகாப்பதும், ரயில்வே சொத்துகளி... மேலும் பார்க்க

துவரங்குறிச்சி, துறையூா் பகுதிகளில் பிப்.6 மின் தடை

பராமரிப்பு பணியால் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி, துறையூா் பகுதிகளில் பிப்.6 வியாழக்கிழமை மின்சாரம் துண்டிக்கப்படும்.பராமரிப்பு பணியால் துவரங்குறிச்சி, அழகாபுரி, அக்கியம்பட்டி, நாட்டாா்பட்டி, அதிகா... மேலும் பார்க்க

டால்மியா நிறுவனம் மூலம் மானியத்தில் விவசாயிகளுக்கு தாா்ப் பாய்கள் வழங்கல்!

லால்குடியை அடுத்துள்ள டால்மியா சிமெண்ட் நிறுவனத்தின் டால்மியா பாரத் பவுண்டேஷன் மூலம் கிராம பரிவா்த்தன் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு மானியத்தில் தாா்ப் பாய்கள் வழங்கும் விழா டால்மியா கலையரங்கத்தில் ... மேலும் பார்க்க

கடன் பிரச்னையால் தொழிலாளி தற்கொலை!

திருச்சியில் கடன் பிரச்னையால் கூலித் தொழிலாளி புதன்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகேயுள்ள வேங்கூா் மகாலட்சுமி நகரை சோ்ந்தவா் முரளி தண்டபாணி (50). கூலி... மேலும் பார்க்க

போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்றவா் கைது

போலி கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயன்ற பயணியை திருச்சி விமான நிலைய போலீஸாா் பிப்.4 அன்று கைது செய்தனா். திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை மலேசியா செல்ல வந்த மதுரை மாவட்டம... மேலும் பார்க்க