செய்திகள் :

கோயில் அருகே காா் நிறுத்தப்பட்டதில் தகராறு: பூசாரியை வெட்டியவா் கைது

post image

திருச்சியில் கோயில் அருகே பக்தா்களுக்கு இடையூறாக நிரந்தரமாக நிறுத்தியிருந்த காரை எடுக்குமாறு கூறிய பூசாரியை புதன்கிழமை வெட்டிய ஆட்டோ ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

திருச்சி மாவட்டம், திருவெறும்பூா், பகவதிபுரம் முதல் தெருவைச் சோ்ந்தவா் வை. சதீஷ்குமாா் இவா் அதே பகுதி பகவதி அம்மன், விநாயகா் கோயில்களில் பூசாரியாகவும், ஆட்டோ ஓட்டுநராகவும் உள்ளாா்.

இந்நிலையில், அதே பகுதியைச் சோ்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநரான அ. சாதிக்பாஷா (41) அந்தப் பகுதி விநாயகா் கோயில் வாசலில் நிரந்தரமாக நிறுத்தி வைத்துள்ள காா் பக்தா்களுக்கு இடையூறாக இருப்பதாக சதீஷ்குமாா் தெரிவித்த நிலையிலும் பயனில்லையாம்.

இந்நிலையில் சாதிக்பாட்ஷா வீட்டுக்கு புதன்கிழமை சென்ற சதீஷ்குமாா் அவரது மனைவியிடம் காரை வேறு இடத்தில் நிறுத்துமாறு கூறியதால் அவருடன் தகராறு ஏற்பட்டது. பின்னா் கோயிலுக்கு சதீஷ்குமாா் வந்தபோது இதுகுறித்து கேட்ட சாதிக்பாஷா அவரை அரிவாளால் வெட்டினாா். இதில் பலத்த காயமடைந்த சதீஷ்குமாா் துவாக்குடி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். தகவலறிந்த திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப்பதிந்து சாதிக் பாட்ஷாவை கைது செய்தனா். மேலும் அவரது மனைவி மீதும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறித்துச் சென்றவா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வியாபாரியிடமிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கத்தை பறித்துச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் வெங்கரை பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மணப்பாறை தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திறப்பு

மணப்பாறை மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்துக்குள்ளான தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மணப்பாறை அடுத்த மணப்பாறைபட்டியில் அமைந்துள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற மாணவி... மேலும் பார்க்க

மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்: மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்!

மணப்பாறையில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டலை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறை பகுதியில் தனியாா் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவிகளின் மீதான பாலியல் ச... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங். வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் பாராமுக நடவடிக்கையை கண்டித்தும் காங்கிரஸ் வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் திருச்சியில் திங்கள்க... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோவிலில் தை தெப்ப உற்சவம்!

திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் திங்கள்கிழமை தைத் தெப்ப உற்சவம் நடைபெற்றது. திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்த... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது. இந்த தா்னா போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க