செய்திகள் :

`சீமான் நல்ல என்டர்டெய்னர்; நானும் அவரை ரசிக்கிறேன்'- பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்

post image

தமிழக பாஜக-வில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று தேனியில் மாவட்டத் தலைவர் ராஜபாண்டி பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், ``திமுக-வுக்கு எதிராக அவர்களை அகற்ற வேண்டிய கட்சியுடன் கூட்டணியை அமைப்போம்.

பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்

ஊழலற்ற ஆட்சியை அமைப்போம் என டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆட்சிக்கு வந்தார். அவரை மக்கள் நம்பினார்கள். ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று மீண்டும் மக்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாய்ப்பளித்தார்கள். ஆனால் அவர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகள் அனைத்திலும் ஊழல் செய்தார்கள். இதனால் இம்முறை அவர்கள் டெல்லியில் ஆட்சி அமைக்க முடியவில்லை. இதன் தொடர்ச்சியாக பஞ்சாப்பிலும் ஆம் ஆத்மி வாக்கு சதவீதம் குறையும்.

பிரசாந்த் கிஷோர் ஒரு கமர்சியல் ஏஜென்சி தான். ஒரு காலத்தில் பாஜக, காங்கிரஸ், திமுக என அனைவருக்கும் ஆலோசகராக இருந்தார். பணம் அதிகம் கொடுக்கக்கூடிய இடத்தில் அவர் ஆலோசனை கொடுக்கிறார். இவர்களது சந்திப்பு எங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக தெரியவில்லை. இது ஒரு வணிக ரீதியான ஒப்பந்தம் தான்.

seeman

சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களில் தமிழகத்தில் எம்ஜிஆரும், ஆந்திராவில் என்.டி.ராமாராவும் வெற்றி பெற்றார். தமிழகத்தில் எம்ஜிஆர் வெற்றிக்கு அடுத்தபடியாக யாரும் வெற்றி பெற வரவில்லை. விஜயகாந்த், கமலஹாசன், சிவாஜி , கருணாஸ், கார்த்தி போன்றோருக்கு அரசியலில் என்ன நிலைமை ஏற்பட்டதோ அதுதான் தவெக தலைவர் விஜய்க்கும் ஏற்படும். சீமான் ஒருநாள், கவிஞர் போன்று உச்சத்தில் இருந்து பேசுவார். மறுநாள் வேறு ஒன்றை உச்சத்தில் பேசுவார். நாம் தமிழர் கட்சிக்கு எதிர்காலம் கிடையாது. அவர் ஒரு என்டர்டெயினர் சீமானை மக்கள் ரசிக்கின்றனர்... நம்பவில்லை. நானும் சீமானை ரசிக்கிறேன்" என்றார்.

Vijay: `தைப்பூசத்துக்கு வாழ்த்து; திருப்பரங்குன்றம் பிரச்னையில் சைலன்ட்'- என்ன நினைக்கிறார் விஜய்?

தேர்தல் வியூக வகுப்பாளர் பிரஷாந்த் கிஷோருடன் பரபர மீட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா என விஜய் கட்சியின் முக்கியமான நிர்வாகி... மேலும் பார்க்க

``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரின் அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைக்குள்ளாகும் சட்டங்கள், விமர்சனத்துக்குள்ளாகும் கருத்துக்களின் மூலம் தினம் தினம் செய்திகளில் இடம்பெறுகிறார். கடந்த வாரம்... மேலும் பார்க்க

``ஊழல் லிஸ்ட்டில் சிறை செல்லும் முதல் நபர் கமிஷன் காந்தி தான்" - அண்ணாமலை

‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே ம... மேலும் பார்க்க

செங்கோட்டையனால் மிரளும் எடப்பாடி? ஒரு பழைய பகை உள்ளது? | Elangovan Explains

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒட்டி, எடப்பாடிக்கு பாராட்டு விழா எடுத்தார்கள். அதை மாஜி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். 'என் உணர்வுகளை பகிர்ந்து உள்ளேன்' என அ... மேலும் பார்க்க

Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?' - சோனியா

ஒரு நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. காரணம், நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர், ஆண் பெண் விகிதம் எப்படியிருக்கிறது, எவ்வளவு பேர் கல்வியற... மேலும் பார்க்க

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க