செய்திகள் :

Census: `NFSA பலன்கள் கிடைக்காமல் 14 கோடி பேர் தவிப்பு; மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது?' - சோனியா

post image

ஒரு நாட்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது அந்நாட்டின் வளர்ச்சிக்கு மிக அவசியமானதாக இருக்கிறது. காரணம், நாட்டில் எவ்வளவு மக்கள் இருக்கின்றனர், ஆண் பெண் விகிதம் எப்படியிருக்கிறது, எவ்வளவு பேர் கல்வியறிவு பெற்றிருக்கின்றனர், எத்தனை பேர் வேலைவாய்ப்பின்றித் தவிக்கின்றனர், எத்தனை குடும்பங்கள் வறுமைக் கோட்டுக்கு கீழ் இருக்கின்றனர், நாட்டின் எதிர்காலமான இளம் தலைமுறையினர் எத்தனை பேர் இருக்கின்றனர் என்பதைக் கண்டறிய மக்கள்தொகை கணக்கெடுப்பு மிக முக்கியமானதாக இருக்கிறது.

BJP - Census

நாட்டு மக்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்பதால், அனைவரையும் சென்றடையும் வகையிலான வளர்ச்சித் திட்டங்களை வகுக்கும் நோக்கில், 1951 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. இதில், கடைசியாகக் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது 2011-ல் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பிறகு 2021-ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ,கொரோனா தொற்றால் நடத்தமுடியாமல் போனது.

ஆனால், நாட்டில் கொரோனா காலகட்டம் முடிந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், மோடி 2.0 அரசு சென்று 3.0 அரசு அமைந்து 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகும், இதுவரையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பற்றி மத்திய பா.ஜ.க அரசு வாய் திறக்காமல் இருக்கிறது. இந்த நிலையில், மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாததால் சுமார் 14 கோடி மக்கள், தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் பலன்களை இழந்துவருவதாகக் காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவரும், மாநிலங்களவை எம்.பி-யுமான சோனியா காந்தி நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

சோனியா காந்தி

நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் உரையாற்றிய சோனியா காந்தி, ``நாட்டின் 140 கோடி மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதன் நோக்கமாக, 2013-ல் ஐக்கிய முற்போக்கு கூட்டணி (UPA) அரசு, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை (NFSA) அறிமுகப்படுத்தியது. இந்தச் சட்டம், கொரோனா காலத்தில் லட்சக்கணக்கான குடும்பங்களைப் பட்டினியிலிருந்து பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகித்தது.

இருப்பினும், இந்தச் சட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கான ஒதுக்கீடு, 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே இன்னும் தீர்மானிக்கப்படுகிறது. இதனால், NFSA திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்த சுமார் 14 கோடி இந்தியர்கள் தங்களுக்கான சரியான பலன்களை இழக்கிறார்கள். சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக, மக்கள்தொகை கணக்கெடுப்பு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமாகியிருக்கிறது.

உலகப் பட்டினி குறியீடு

மக்கள்தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து இன்னும் தெளிவு இல்லை. பட்ஜெட் ஒதுக்கீடுகளும், மக்கள் தொகை கணக்கெடுப்பு இந்த ஆண்டு நடத்தப்பட வாய்ப்பில்லை என்பதைக் காட்டுகிறது. எனவே, அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பை விரைவில் நடத்தி முடக்க முன்னுரிமை அளித்து, NFSA திட்டத்தின் கீழ் தகுதிவாய்ந்தவர்கள் பலன்கள் பெறுவதை உறுதிசெய்வது அவசியம். உணவுப் பாதுகாப்பு என்பது ஒரு சலுகை அல்ல, அடிப்படை உரிமை." என்று கூறினார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

``சனிக்கிழமைக்குள் விடுவிக்காவிட்டால்... நகரம் முழுவதும் வெடிக்கும்" - ஹாமஸை எச்சரிக்கும் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபராக ட்ரம்ப் பதவியேற்றதிலிருந்து அவரின் அதிரடி நடவடிக்கைகள், சர்ச்சைக்குள்ளாகும் சட்டங்கள், விமர்சனத்துக்குள்ளாகும் கருத்துக்களின் மூலம் தினம் தினம் செய்திகளில் இடம்பெறுகிறார். கடந்த வாரம்... மேலும் பார்க்க

``ஊழல் லிஸ்ட்டில் சிறை செல்லும் முதல் நபர் கமிஷன் காந்தி தான்" - அண்ணாமலை

‘ஊழல் அமைச்சர் காந்தி உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழகத்தில் 2026-ல் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வரும்போது திமுக ஊழல் அமைச்சர்களில் காந்தியே ம... மேலும் பார்க்க

செங்கோட்டையனால் மிரளும் எடப்பாடி? ஒரு பழைய பகை உள்ளது? | Elangovan Explains

இன்றைய இம்பர்ஃபெக்ட் ஷோ ஃவில்,அத்திக்கடவு - அவிநாசி திட்டத்தை ஒட்டி, எடப்பாடிக்கு பாராட்டு விழா எடுத்தார்கள். அதை மாஜி அமைச்சர் செங்கோட்டையன் புறக்கணித்துள்ளார். 'என் உணர்வுகளை பகிர்ந்து உள்ளேன்' என அ... மேலும் பார்க்க

`சீமான் நல்ல என்டர்டெய்னர்; நானும் அவரை ரசிக்கிறேன்'- பாஜக மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன்

தமிழக பாஜக-வில் புதிய மாவட்டத் தலைவர்கள் நியமிக்கப்பட்ட நிலையில், நேற்று தேனியில் மாவட்டத் தலைவர் ராஜபாண்டி பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது. தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங... மேலும் பார்க்க

Rahul Gandhi: "ராகுல்ஜி ஜீரோ பாருங்கள்..." - நாடாளுமன்றத்தில் ராகுலைக் கிண்டல் செய்த அனுராக் தாகூர்

டெல்லியில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், எதிர்க்கட்சியாக இருந்த பா.ஜ.க 48 இடங்களில் வென்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கிறது. ஆளுங்கட்சியாக இருந்த ஆம் ஆத்மி 22 இ... மேலும் பார்க்க

Trump: "மெக்சிகோ வளைகுடா இனி அமெரிக்க வளைகுடா" - ட்ரம்ப்பின் பெயர் மாற்றம் செல்லுபடியாகுமா?

அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து பல அதிரடி அறிவிப்புகளைச் செய்து வருகிறார். அதில் ஒன்று மெக்சிகோ வளைகுடாவை அமெரிக்க வளைகுடா எனப் பெயர் மாற்றியது. கடந்த மாதமே செய்தியாளர் சந்திப்... மேலும் பார்க்க