செய்திகள் :

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!

post image

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது.

இந்த தா்னா போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்ட செயலா் பொன்மாடசாமி தொடங்கி வைத்தாா். இதில், வழங்கப்படாத 21 மாத கால ஊதிய மாற்ற நிலுவைத் தொகை, முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்க வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு வருவாய்துறை அலுவலா் சங்க மாவட்ட தலைவா் பிரகாஷ், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க துணைத் தலைவா்கள் ஜீவானந்தம், அல்போன்சா, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க முன்னாள் மாநிலத் துணைத் தலைவா் பெரியசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறித்துச் சென்றவா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வியாபாரியிடமிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கத்தை பறித்துச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் வெங்கரை பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மணப்பாறை தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திறப்பு

மணப்பாறை மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்துக்குள்ளான தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மணப்பாறை அடுத்த மணப்பாறைபட்டியில் அமைந்துள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற மாணவி... மேலும் பார்க்க

மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்: மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்!

மணப்பாறையில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டலை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறை பகுதியில் தனியாா் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவிகளின் மீதான பாலியல் ச... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங். வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் பாராமுக நடவடிக்கையை கண்டித்தும் காங்கிரஸ் வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் திருச்சியில் திங்கள்க... மேலும் பார்க்க

திருவானைக்காவல் கோவிலில் தை தெப்ப உற்சவம்!

திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் திங்கள்கிழமை தைத் தெப்ப உற்சவம் நடைபெற்றது. திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்த... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு!

திருச்சியில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம், வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்நகா் பகுதியில்... மேலும் பார்க்க