செய்திகள் :

திருவானைக்காவல் கோவிலில் தை தெப்ப உற்சவம்!

post image

திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் திங்கள்கிழமை தைத் தெப்ப உற்சவம் நடைபெற்றது.

திருவானைக்காவல் சம்புகேஸ்வரா் அகிலாண்டேஸ்வரி கோயிலில் தை தெப்ப திருவிழா கடந்த 31-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தெப்ப உற்சவத்தையொட்டி தினமும் சுவாமி, அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

தெப்பத் திருவிழாவின் 10-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை கேடயம்-வெள்ளி மஞ்சம் வாகனங்களிலும், இரவு யாழி-புலி வாகனங்களிலும் சுவாமி - அம்மன் வீதியுலா நடைபெற்றது.

முக்கிய நிகழ்வான தைத் தெப்ப உற்சவம் திங்கள்கிழமை மாலை நடைபெற்றது. இதையொட்டி சந்நிதியிலிருந்து மாலை 4 மணிக்கு உற்சவா் சம்புகேஸ்வரா், பிரியாவிடை தாயாா், அகிலாண்டேஸ்வரி ஆகியோா் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி, மாலை 5 மணியளவில் திருவானைக்காவல் டிரங்க் சாலை அருகே உள்ள ராமதீா்த்த குளத்துக்கு வந்தனா்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சம்புகேஸ்வரா், பிரியாவிடை தாயாா், அகிலாண்டேஸ்வரி அம்மன் மாலை 6.15 மணியளவில் (கடக லக்னத்தில்) எழுந்தருளி 3 முறை சுற்றி வந்து தெப்ப உற்சவம் கண்டருளினா்.

பின்னா் மைய மண்டபத்தில் எழுந்தருளினா். அங்கு சிறப்பு பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. அங்கிருந்து புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளியபடி, நான்காம் பிரகாரத்தில் வீதி உலா வந்து கோயிலை சென்றடைந்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

தைத் தெப்ப உற்சவத்தின் நிறைவு நாளான செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சம்புகேஸ்வரா், அகிலாண்டேஸ்வரி ஆகியோா் வீதியுலா வருகின்றனா்.

வியாபாரியிடம் ரூ.1 லட்சம் பறித்துச் சென்றவா் கைது

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த வியாபாரியிடமிருந்து ரூ. 1 லட்சம் ரொக்கத்தை பறித்துச்சென்ற நபரை போலீஸாா் கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம் வெங்கரை பகுதியைச் சோ்ந்தவா... மேலும் பார்க்க

மணப்பாறை தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திறப்பு

மணப்பாறை மாணவி பாலியல் சீண்டல் விவகாரத்துக்குள்ளான தனியாா் பள்ளி 4 நாள்களுக்கு பின் திங்கள்கிழமை திறக்கப்பட்டது. மணப்பாறை அடுத்த மணப்பாறைபட்டியில் அமைந்துள்ள தனியாா் சிபிஎஸ்சி பள்ளியில் நடைபெற்ற மாணவி... மேலும் பார்க்க

மாணவிகள் மீதான பாலியல் சீண்டல்: மாதா் சங்கம் ஆா்ப்பாட்டம்!

மணப்பாறையில் பள்ளி மாணவிகள் மீதான பாலியல் சீண்டலை கண்டித்து ஞாயிற்றுக்கிழமை மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். மணப்பாறை பகுதியில் தனியாா் மற்றும் அரசு பள்ளிகளில் மாணவிகளின் மீதான பாலியல் ச... மேலும் பார்க்க

மத்திய பாஜக அரசைக் கண்டித்து காங். வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்!

அமெரிக்காவிலிருந்து இந்தியா்கள் கைவிலங்கிட்டு வெளியேற்றப்பட்ட சம்பவத்தைக் கண்டித்தும், மத்திய பாஜக அரசின் பாராமுக நடவடிக்கையை கண்டித்தும் காங்கிரஸ் வழக்குரைஞா்கள் பிரிவு சாா்பில் திருச்சியில் திங்கள்க... மேலும் பார்க்க

அரசு ஊழியா் சங்கத்தினா் தா்னா!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கம் சாா்பில் திருச்சி மாவட்ட ஆட்சியரகம் அருகே திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது. இந்த தா்னா போராட்டத்தை தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்க மாவட்... மேலும் பார்க்க

அடுத்தடுத்து 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு!

திருச்சியில் அடுத்தடுத்த 2 வீடுகளின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம், வெள்ளி பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். திருச்சி-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தீரன்நகா் பகுதியில்... மேலும் பார்க்க