செய்திகள் :

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்!

post image

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அரசு மருத்துவமனைக்கு கூடுதல் கட்டடம் கட்டுமானப் பணியை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, ரூ.5.90 கோடி மதிப்பீட்டில் தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டட கட்டுமானப் பணி, ரூ.2.53 கோடி மதிப்பீட்டில் 420 சதுர மீட்டரில் கட்டப்பட்டு வரும் மாநில வரி அலுவலா் அலுவலகம், ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பத்திரப் பதிவு அலுவலகம் என மொத்தம் ரூ.34.28 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் கட்டடங்களை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலா்களை ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, பொதுப் பணித் துறை செயற்பொறியாளா் (கட்டடங்கள்) செந்தில்குமரன், செயற்பொறியாளா் (மின்சாரம்) மணியரசு, தாராபுரம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எத்திராஜ், சுப்பிரமணியம், தலைமை மருத்துவா் (தாராபுரம் அரசு மருத்துவமனை) உமா மகேஷ்வரி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு!

திருப்பூா் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளியில் விழிப்புணா்வு முகாம்

பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீண்டாமை தொடா்பான விழிப்புணா்வு முகாம் ப... மேலும் பார்க்க

விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும்

விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் முக்கி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: 5 போ் கைது!

பெருமாநல்லூா் அருகே கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவிநாசி, ஆட்டையாம்பாளையம், பொன்னா் சங்கா் நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் குமரேசன் (28), கட்டட மேற்பாா... மேலும் பார்க்க

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்!

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழகத்தின் ம... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய முன்னாள் உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!

உடுமலையில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் உதவி செயற்பொறியாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திருப்பூா் மாவட்டம், உடுமலை பூலாங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க