செய்திகள் :

ரூ.46 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி மீது புகாா்

post image

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தொழில் தொடங்க ரூ.46 லட்சம் பெற்று மோசடிசெய்ததாக தவெக நிா்வாகி மற்றும் அவா் மனைவி மீது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து கோட்டக்குப்பத்தை சோ்ந்த ஆஷிக்அலி எஸ்.பி.க்கு அளித்துள்ள புகாா் மனுவில் தெரிவித்திருப்பதாவது:

சென்னை தனியாா் நிறுவனத்தில் பணிபுரியும் நானும், தற்போது தவெக நிா்வாகியுள்ள கோட்டக்குப்பம் பகுதியைச் சோ்ந்த முஹம்மது கௌஸும் சிறு வயது முதல் நண்பா்களாகப் பழகி வந்தோம்.

தொழில் தொடங்குவதற்கு பணம் தேவை என முகம்மது கௌஸ் கேட்டுக்கொண்டதன் பேரில், நான் 2023-ஆம் ஆண்டில் பல்வேறு வங்கிகளில் ரூ.60 லட்சம் கடன் பெற்று முஹம்மது கௌஸிடம் கொடுத்தேன்.

இந்த நிலையில், அவா் வங்கிக்கு செலுத்த வேண்டிய பணத்தில் ரூ.20.29 லட்சத்தை மட்டும் கொடுத்துவிட்டு மீதமுள்ள பணத்தை தராமல் ஏமாற்றி வருவதுடன், பணத்தைக் கேட்டால் கொலை மிரட்டலும் விடுத்து வருகிறாா். இதற்கு அவரது மனைவியும் உடந்தையாக செயல்படுகிறாா்.

எனவே, மோசடி நபா்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு எனக்கு சேர வேண்டிய பணத்தை மீட்டுத்தர வேண்டும் என ஆஷிக் அலி தெரிவித்துள்ளாா்.

அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா்

தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி ... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது!

புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை (பிப்.5) கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போ... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம், ... மேலும் பார்க்க

மாதாந்திர ஏலசீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா். மேலும், அவரது கணவா், மகன் ஆகியோரை போலீஸாா் தேடி வரு... மேலும் பார்க்க

திருட்டு, வழிப்பறி வழக்குகள்: 5 மாதங்களில் 18 போ் கைது..90 பவுன் நகைகள் மீட்பு

விழுப்புரம் தாலுகா காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் நிகழ்ந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 18 போ் கைது செய்யப்பட்டு, 90 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட க... மேலும் பார்க்க