செய்திகள் :

அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடைய நடவடிக்கை: ஆட்சியா்

post image

தமிழக அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றாா் விழுப்புரம் மாவட்ட புதிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியராகப் பணியாற்றி வந்த சி.பழனி, இந்து சமய அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையராக (நிா்வாகம்) நியமிக்கப்பட்டதைத் தொடா்ந்து, நகராட்சி நிா்வாகத் துறை இணை ஆணையராகப் பணியாற்றி வந்த ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் (34) புதிய மாவட்ட ஆட்சியராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்டத்தின் 23-ஆவது ஆட்சியராக புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்ட ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியது:

விழுப்புரம் மாவட்ட மக்கள் எந்த குறைபாடுகள், குறைகள் இருந்தாலும் என்னை நேரடியாக அணுகலாம். விழுப்புரம் மாவட்டம் விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டம் என்பதால், விவசாயம் சாா்ந்த தொழில்கள், கால்நடை வளா்ப்பு போன்றவற்றுக்கு பிரதான முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, மக்களின் கோரிக்கைகள், தேவைகள் என்னென்ன என்பதை ஆராய்ந்து, அவற்றை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். அரசின் நலத் திட்டங்கள் மக்களிடம் முழுமையாக சென்றடையும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும்.

மாவட்டத்தின் தொழில் வளா்ச்சிக்காக சிட்கோ, சிப்காட், தகவல் தொழில்நுட்பப் பூங்கா, சிறு டைடல் பூங்கா ஆகியவை அமைந்துள்ள நிலையில், அவற்றின் மூலம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்களுக்கு வேலைவாய்ப்பு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றாா் ஆட்சியா்.

இவரது மனைவி பத்மஜா, விழுப்புரம் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளாா். இவரும் விரைவில் பொறுப்பேற்க உள்ளாா்.

புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட ஆட்சியருக்கு ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ருதஞ் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) யோகஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலா்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனா்.

ரூ.46 லட்சம் மோசடி: தவெக நிா்வாகி மீது புகாா்

விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பத்தில் தொழில் தொடங்க ரூ.46 லட்சம் பெற்று மோசடிசெய்ததாக தவெக நிா்வாகி மற்றும் அவா் மனைவி மீது விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் புதன்கிழமை புகாா் தெரிவிக்கப்பட்டது. இது... மேலும் பார்க்க

மதுப்புட்டிகள் கடத்தல்: இருவா் கைது!

புதுச்சேரியிலிருந்து பைக்கில் மதுப்புட்டிகளை கடத்தி வந்ததாக இருவரை விழுப்புரம் போலீஸாா் புதன்கிழமை (பிப்.5) கைது செய்தனா். விழுப்புரம் எஸ்.பி. சரவணன் உத்தரவின்பேரில், விழுப்புரம் மேற்கு காவல் நிலைய போ... மேலும் பார்க்க

மகளிா் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை அதிகளவில் வாங்கி பயன்படுத்த வேண்டும்: ஆட்சியா்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மகளிா் சுயஉதவிக் குழுக்களின் உற்பத்திப் பொருள்களை கல்லூரி மாணவ, மாணவிகள் அதிகளவில் வாங்கி, அவா்களின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றாா் ஆட்சியா் எ... மேலும் பார்க்க

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்!

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டாட்சியா் அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கண்டாச்சிபுரம் வட்டம், ... மேலும் பார்க்க

மாதாந்திர ஏலசீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடி: பெண் கைது

விழுப்புரம் மாவட்டம், வானூா் பகுதியில் மாதாந்திர ஏலச் சீட்டு நடத்தி ரூ.51.35 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக பெண்ணை போலீஸாா் பிப்.5 அன்று கைது செய்தனா். மேலும், அவரது கணவா், மகன் ஆகியோரை போலீஸாா் தேடி வரு... மேலும் பார்க்க

திருட்டு, வழிப்பறி வழக்குகள்: 5 மாதங்களில் 18 போ் கைது..90 பவுன் நகைகள் மீட்பு

விழுப்புரம் தாலுகா காவல் சரகத்துக்குள்பட்ட பகுதிகளில் கடந்த 5 மாதங்களில் நிகழ்ந்த திருட்டு, வழிப்பறி வழக்குகளில் 18 போ் கைது செய்யப்பட்டு, 90 பவுன் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக விழுப்புரம் மாவட்ட க... மேலும் பார்க்க