செய்திகள் :

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி போதைப் பொருள் பறிமுதல்

post image

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.

சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சென்னை சா்வதேச விமான நிலையத்தில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னைக்கு தனியார் பயணிகள் விமானத்தில் வந்து வெளியேறிக்கொண்டிருந்த பயணிகளை மத்திய அதிகாரிகள் கண்காணித்தனா்.

அப்போது, சுங்கத்துறை மோப்ப நாய், சென்னையைச் சேர்ந்த சுமார் 30 வயது ஆண் பயணி ஒருவரின் உடமையை மோப்பம் பிடித்து, போதைப் பொருள் இருந்ததை கண்டுபிடித்துக் கொடுத்ததுடன் அதே இடத்தில் தரையில் அமர்ந்து கால் நகங்களால், தரையை கீரி சைகை காட்டியது.

இதையடுத்து, சுங்கத்துறை அதிகாரிகள் அந்தப் பயணியின் உடமையை திறந்து பார்த்து பரிசோதித்த போது, அதனுள் இருந்த 3 பார்சல்களில், பதப்படுத்தப்பட்ட உயரக கஞ்சா இருந்தது தெரிய வந்தது.

உடனடியாக சுங்க அதிகாரிகள் அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, கடத்தல் ஆசாமியை கைது செய்தனர்.

இதையும் படிக்க |முறையாக சமைக்காத இறைச்சியிலிருந்து பரவும் ஜிபிஎஸ்: மருத்துவா்கள் எச்சரிக்கை

பறிமுதல் செய்யப்பட்ட 6.9 கிலோ உயரக பதப்படுத்தப்பட்ட கஞ்சாவின் சர்வதேச மதிப்பு ரூ.7 கோடி என சுங்கத்துறையினர் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அந்த பயணியிடம் விசாரணை நடத்திய போது, இவர் கஞ்சா கடத்தலுக்காக கடந்த இரு நாள்களுக்கு முன்பு பாங்காக் சென்று விட்டு, இந்த விமானத்தில் திரும்பி வந்துள்ளார். இவரை பாங்காக் அனுப்பி வைத்த ஆசாமி, சென்னை விமான நிலையத்திற்கு வந்து, கஞ்சாவை வாங்கிக் கொண்டு, கடத்தல் வேலைக்காக இவருக்கு கொடுக்க வேண்டிய அன்பளிப்பு பணத்தையும் கொடுத்து விடுவதாக கூறியிருந்தார்.

ஆனால், பயணி சுங்கத்துறையிடம் சிக்கிக் கொண்டது தெரிந்ததும் அவர் தலைமறைவாகிவிட்டார். அவரை, சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திவரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய உயரக கஞ்சா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம், சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக இருவேறு மதத்தவருக்கிடையே கருத்து மோதல்... மேலும் பார்க்க

தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்து வருகிறது. தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெர... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடும் ஏற்படாததால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தி... மேலும் பார்க்க

ஓடிடியில் கேம் சேஞ்சர்: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ராம் சரண் நடிப்பில் வெளியான கேம் சேஞ்சர் திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்த... மேலும் பார்க்க

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்ள வேண்டுமா? வெளியான அறிவிப்பு!

குடும்ப அட்டையில் திருத்தம் மேற்கொள்வதற்காக சென்னையிலுள்ள 19 மண்டலங்களில் வருகின்ற பிப். 8 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட மக்கள் குறைதீர் முகாம் நடைபெறுகிறது.பொது விநியோகத் திட்டத்தின் பயன்களை குடிமக்க... மேலும் பார்க்க

ஈரோடு கிழக்கில் வாக்குப்பதிவு நிறைவு!

ஈரோடு கிழக்கு சட்டப் பேரவைத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்துள்ளது. மேலும் பார்க்க