செய்திகள் :

தொடர்ந்து உயரும் தங்கம் விலை... இன்று எவ்வளவு உயர்ந்தது தெரியுமா?

post image

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகி புதிய வரலாறு படைத்து வருகிறது.

தொடர்ந்து தங்கம் விலை உயர்ந்து வருவது நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வரும் நிலையில், திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 குறைந்து ரூ.61,640-க்கு விற்பனையானது. செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.840 உயர்ந்து ரூ.62,480-க்கு விற்பனையானது. புதன்கிழமை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (பிப்.6) கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.7,930-க்கும், பவுனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.63,440-க்கு விற்பனையாகிறது.

கடந்த மூன்று நாள்களில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.1800 உயர்ந்துள்ள நிலையில், தங்கம் விலை உயர்வு நடுத்தர மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிக்க |சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி போதைப் பொருள் பறிமுதல்

வெள்ளி விலை நிலவரம்

வெள்ளி நேற்றைய விலையில்(புதன்கிழமை) மாற்றமின்றி கிராம் ரூ.107-க்கும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.1,07,000-க்கு விற்பனையாகிறது.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முக்கிய நடவடிக்கைகள், பிப்ரவரி 1 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2025-26-க்கான மத்திய நிதிநிலை அறிக்கையில் தங்கத்துக்கான இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாதது மற்றும் சர்வதேச அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்த விலை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம்: தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் - பாமக நிறுவனர் ராமதாஸ்

விழுப்புரம் : கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை நிகழ்வுக்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.திண்டிவனம் அருகிலுள... மேலும் பார்க்க

சேலத்தில் விடாமுயற்சி வெளியானது! ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாட்டம்!!

சேலம்: சேலத்தில் நடிகர் அஜித் நடிப்பில் உருவான 'விடாமுயற்சி ’ திரைப்படம் வெளியானதையடுத்து ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் அஜித் பேனருக்கு பால் அபிஷேகம் செய்தும் உற்சாகமாக கொண்டாடினர்.இயக்குநர் மகிழ் திரு... மேலும் பார்க்க

மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்து: சாலையில் கொட்டிய மீனை போட்டி போட்டு அள்ளிச் சென்ற மக்கள்!

வேலூர்: அகரம் சேரி சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மீன் ஏற்றிச் சென்ற வேன் டயர் வெடித்து விபத்துக்கள்ளானதில் சாலையில் கொட்டிய மீன்களை அந்த பகுதி மக்கள் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றன... மேலும் பார்க்க

மதுரையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு

மதுரை சுப்பிரமணியபுரம் காவல்நிலையத்தில் பாஜக முன்னாள் தேசியச் செயலா் எச். ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் மலை மீதான வழிபாடு தொடா்பாக இருவேறு மதத்தவருக்கிடையே கருத்து மோதல்... மேலும் பார்க்க

சாம்சங் தொழிலாளா்கள் 2 ஆவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டம்

சாம்சங் தொழிலாளா்கள் 3 போ் தற்காலிக பணியிடை நீக்கம் குறித்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடும் ஏற்படாததால் சுமாா் 500-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் இரண்டாவது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தி... மேலும் பார்க்க

சென்னை விமான நிலையத்தில் ரூ.7 கோடி போதைப் பொருள் பறிமுதல்

பாங்காக்கிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்பிலான 6.9 கிலோ உயரக பதப்படுத்தப்பட்ட கஞ்சா சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.சுங்கத்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சென்ன... மேலும் பார்க்க