செய்திகள் :

பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க சதி: அகிலேஷ் யாதவ்

post image

பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்க புதிய கல்விக் கொள்கை மூலம் மத்திய அரசு சதி செய்வதாக சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பல்கலைக்கழக மானியக் குழுவின் வரைவு நெறிமுறைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்து, தில்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி நடத்திய ஆர்ப்பாட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திமுக தலைவர்கள் டி.ஆர். பாலு, கனிமொழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையும் படிக்க : தமிழக ஆளுநர் மௌனமாக இருக்கலாமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

இந்த ஆர்ப்பாட்டத்தில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான நடைபெறும் இந்த போராட்டத்தை சமாஜவாதி ஆதரிக்கிறது.

தொழிலதிபர்களை தொடர்ந்து ஆதரித்து வந்தால், ஒரு கட்டத்தில் நீங்கள் அவர்களின் சேவகர்களாக மாறிவிடுவீர்கள் என்று முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் ஒருமுறை கூறினார்.

புதிய கல்விக் கொள்கையானது பல்கலைக்கழகங்களை தொழிலதிபர்களிடம் ஒப்படைக்கும் சதி. மாநிலத்தின் அனைத்து அதிகாரங்களையும் கைப்பற்ற மத்திய அரசு நினைக்கிறது.

அரசியலையும் அரசியல்வாதிகளையும் தொழிலதிபர்களின் சேவகர்களாக மாற்ற விரும்புகிறார்கள். புதிய கல்விக் கொள்கையை நாங்கள் ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம்” எனத் தெரிவித்தார்.

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்... மேலும் பார்க்க

40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியர்க... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வெளியுறவுத... மேலும் பார்க்க

கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்

புது தில்லி: அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்த போது, கை மற்றும் கால்களில் விலங்கு போட்டிருந்தனர் என்று இந்தியர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!

யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதி... மேலும் பார்க்க