செய்திகள் :

40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

post image

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

"இந்திய மக்கள் 7.25 லட்சத்திற்கும் அதிகமானோர் சிறந்த வாழ்க்கையைத் தேடி அமெரிக்கா சென்றனர். பிரதமர் மோடி அரசு, ஆண்டுதோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாக்குறுதியை நிறைவேற்றாததாலும், நாட்டில் 40% வேலையின்மை இருப்பதாலும் அவர்கள் தங்கள் குடும்பங்களுக்காகச் சம்பாதிக்க அமெரிக்கா செல்ல வேண்டியிருந்தது.

இதையும் படிக்க | இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

தற்போது இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட இந்தியர்கள் 40 மணி நேரம் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தனர். அவர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டிருந்தது. கப்பல்களில் கன்டெய்னரில் ஏற்றப்பட்ட அவர்கள், கழிப்பறைகளைப் பயன்படுத்தக்கூட அனுமதிக்கப்படவில்லை. இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? பாஜக அரசு ஏன் அமைதியாக இருக்கிறது?

ஆயிரக்கணக்கான இந்திய சகோதர, சகோதரிகள் அமெரிக்க தடுப்பு மையங்களில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எப்படி இங்கு கொண்டு வரப்படுவார்கள்?

'அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்கள் பங்களித்துள்ளனர், அவர்கள் அமெரிக்காவீல் வேலை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும்' என்று பிரதமர் மோடியால் ஏன் சொல்ல முடியவில்லை?

குறைந்தபட்சம் அவர்களை மரியாதையுடன் இங்கு அழைத்து வந்து வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம்" என்று கூறியுள்ளார்.

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்!

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்... மேலும் பார்க்க

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.இந்தியர்க... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வெளியுறவுத... மேலும் பார்க்க

கை, கால்களில் விலங்கிட்டனர்: அமெரிக்காவிலிருந்து வந்த இந்தியர்கள் தகவல்

புது தில்லி: அமெரிக்காவிலிருந்து அழைத்து வந்த போது, கை மற்றும் கால்களில் விலங்கு போட்டிருந்தனர் என்று இந்தியர்கள் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும்... மேலும் பார்க்க

ஒரே நாடு, ஒரே மொழியைக் கொண்டுவர முயற்சி: திமுக ஆர்ப்பாட்டத்தில் ராகுல் பேச்சு!

யுஜிசியின் புதிய வரைவு விதிகளுக்கு எதிராக தில்லியில் திமுக மாணவரணி சார்பில் நடைபெறும் போராட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டுள்ளார். பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பதி... மேலும் பார்க்க