செய்திகள் :

இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

post image

அமெரிக்காவில் சட்டவிரோதமாகக் குடியேறிய இந்தியர்களை ராணுவ விமானத்தில் ஏற்றும்போது, அவர்களது கை, கால்களில் விலங்கு போட்டிருந்த விடியோவை அமெரிக்காவே வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தியர்கள் 104 பேர் அமெரிக்காவிலிருந்து ராணுவ விமானத்தில் அழைத்து வந்த போது, கை, கால்களில் விலங்கிடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இந்தியர்களை ஏலியன் எனக் குறிப்பிட்டு, கை, கால்களில் விலங்கிடப்பட்டிருக்கும் விடியோவை அமெரிக்க எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்டு மேலும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது.

அமெரிக்காவிலிருந்து இந்தியர்கள் கைவிலங்கிடப்பட்டு அழைத்து வரப்பட்டதாக நேற்று புகைப்படங்கள் வெளியான நிலையில், அதனை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்து, அந்தப் புகைப்படங்கள் போலியானது என்று செய்திகளும் வெளியான நிலையில், அது தொடர்பான விடியோவையை அமெரிக்காவே வெளியிட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து தாயகம் திரும்பிய பலரும், தங்களது கை, கால்களில் விலங்கிடப்பட்டிருந்ததாகக் கூறியிருந்தார்கள். இந்தியா திரும்பியபோது, எங்களின் கை மற்றும் கால்களில் விலங்கிடப்பட்டு இருந்ததாகவும், பயணம் முழுவதும் சங்கிலியால் பூட்டப்பட்டிருந்தோம். விமானம் அமிர்தசரஸில் தரையிறங்கிய பிறகுதான் எங்கள் கால்களில் இருந்த சங்கிலி அகற்றப்பட்டது என்றும் பலரும் தெரிவித்திருந்தனர்.

அமெரிக்காவிலிருக்கும் வேறொரு முகாமுக்குத்தான் அழைத்துச் செல்லப்படுவோம் என்று நினைத்திருந்ததாகவும், செய்திகள் மூலமாகத்தான் தாங்கள் இந்தியா அழைத்து வரப்படுவதையே அறிந்துகொண்டோம் என்றும் சிலர் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆனால், இந்தியர்களுக்கு கைவிலங்கு இட்டதாக வந்த தகவல்களை மத்திய அரசின் பத்திரிகை தகவல் மையம் மறுத்ததோடு, இந்த புகைப்படங்கள் அகதிகளை குவாத்தமாலா பகுதிக்கு நாடு கடத்தும்போது எடுத்தப் புகைப்படங்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை மத்திய அரசு தரப்பில் விளக்கம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மதியம் 2 மணிக்கு நாடாளுமன்றத்தில் வெளியுறவுத் துறை அமைச்சர் விளக்கமளிக்கவிருக்கிறார்.

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியதற்காக நாடு கடத்தப்பட்ட 104 இந்தியர்கள், அந்நாட்டு ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள அமிருதசரஸ் சர்வதேச விமான நிலயைத்துக்கு வந்தடைந்தனர்.

இந்த விவகாரத்தில், இந்தியர்கள் கைவிலங்கு போடப்பட்டு அவமதிக்கப்படும் படங்கள் நேற்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தது.

மத்தியப் பிரதேசத்தில் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்து!

மத்தியப் பிரதேசத்தில் இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 பயிற்சி விமானம் விபத்தில் சிக்கியது.மத்தியப் பிரதேசத்தின் சிவபுரி மாவட்டத்தில் உள்ள பஹ்ரேதா சனி கிராமம் அருகே இந்திய விமானப்படையின் மிராஜ் 2000 ... மேலும் பார்க்க

பாஜகவுக்கு நாட்டு நலனே முக்கியம்: பிரதமர் மோடி

காங்கிரஸ் கட்சிக்கு குடும்ப நலனே முக்கியம்; ஆனால், பாரதிய ஜனதாவுக்கு நாட்டின் நலனே முக்கியம் என மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்... மேலும் பார்க்க

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு யுஜிசி நோட்டீஸ்!

ராகிங் எதிர்ப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத 18 மருத்துவக் கல்லூரிகளுக்கு பல்கலைக் கழக மானியக் குழு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இது குறித்து 7 நாள்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளத... மேலும் பார்க்க

சட்டப்படிதான் இந்தியர்களின் கை,கால்களில் விலங்கு: அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்

சட்டவிரோதமாக குடியேறியவர்கள் திருப்பி அனுப்பப்படுவது வழக்கமான நடைமுறைதான் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்... மேலும் பார்க்க

40 மணி நேரம் கை, கால்களில் விலங்கு; கழிப்பறைக்குக்கூட அனுமதி இல்லை; இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? - காங்கிரஸ்

அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு போடப்பட்டது குறித்து இந்தியர்கள் என்ன தீவிரவாதிகளா? என காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கேள்வி எழுப்பியுள்ளார். இதுக... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு விலங்கு: மதியம் 2 மணிக்கு விளக்கமளிக்கிறார் ஜெய்சங்கர்

அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்ட இந்தியர்களுக்கு கை, கால்களில் விலங்கிடப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கம் எழுப்பிய நிலையில், இன்று மதியம் 2 மணிக்கு வெளியுறவுத... மேலும் பார்க்க