செய்திகள் :

மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்கில் மோசடி?

post image

மும்பையில் அடிக்கடி சினிமா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பழம்பெரும் நடிகர்கள் பெயரில் வழங்கப்படுவதுண்டு. சினிமாவோடு தொடர்புடைய சில அமைப்புகள் இவ்விருது வழங்கும் விழாக்களை நடத்துவது வழக்கம். ஆனால் அதனை பயன்படுத்தி சிலர் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பது தெரிய வந்தது.

சினிமா துறையில் தாதாசாஹேப் பால்கே விருது மிகவும் பிரபலம் ஆகும். அதனை சினிமா துறையில் பிரபலமானவர்களுக்கு மத்திய அரசு கொடுத்து கெளரவித்து வருகிறது. அந்த பெயரை பயன்படுத்தி ஒரு கும்பல் பாலிவுட் பிரபலங்களை ஏமாற்றி பணம் சம்பாதித்து இருக்கிறது. அனில் மிஸ்ரா என்பவர் தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா விருது என்ற பெயரில் விருதுகள் வழங்கி கோடிக்கணக்கில் மோசடி செய்து வருவதாக மும்பை பா.ஜ.க சினிமா பிரிவு நிர்வாகி சமீர் தீக்‌ஷித் என்பவர் மும்பை பாந்த்ரா போலீஸில் புகார் செய்தார்.

அதன் அடிப்படையில் போலீஸார் நடத்திய விசாரணையில் பல முக்கிய தகவல் கிடைத்துள்ளது. அனில் மிஸ்ரா ஆரம்பத்தில் சினிமா தயாரிப்பாளர் ஒருவரிடம் உதவியாளர் வேலை செய்யும் ஸ்பாட் பாய் வேலை செய்து வந்துள்ளார்.

அதன் பிறகு அனில் மிஸ்ரா சொந்தமாக தாதாசாஹேப் பால்கே சர்வதேச திரைப்படவிழா விருதுகள் என்ற ஒன்றை தொடங்கி விருதுகளை விற்பனை செய்து வந்துள்ளார். அவருடன் அவரது மகன் அபிஷேக் மிஸ்ரா, மனைவி பார்வதி, மகள் ஸ்வேதா ஆகியோரும் சேர்ந்து விருதுகளை விற்பனை செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரை சேர்ந்த அனில் மிஸ்ரா வர்த்தக ரீதியில் தோல்வி அடைந்த சினிமாக்கள் மற்றும் நடிகர்களிடம் கணிசமான பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு சினிமா விருதுகளை விற்பனை செய்து வந்தார். இதற்காக அரசு மற்றும் அரசு துணை நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் ஸ்பான்சர்ஷிப் பெற்றுள்ளார்.

வரும் 20ம் தேதி பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட் எண்ட் என்ற ஐந்து நட்சத்திர ஹோட்டலில் சினிமா விருது வழங்கும் நிகழ்ச்சிக்கு அனில் மிஸ்ரா ஏற்பாடு செய்திருந்தார். இதற்கான அனுமதியை சர்வதேச டூரிஸம் பெஸ்டிவல் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் பெற்று இருந்தது. ஆனால் அந்த நிறுவனம் மூடப்பட்டுவிட்டுவிட்டது. அனில் மிஸ்ரா தவறான தகவலை சொல்லி சினிமா விருதுக்கு அனுமதி பெற்று இருப்பது தெரிய வந்துள்ளது. அனில் மிஸ்ராவின் அமைப்புக்கு அரசு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. மூன்று முறை விண்ணப்பித்திருந்தார். ஆனால் மூன்று முறையும் அவரது மனு நிராகரிக்கப்பட்டுவிட்டது.

தற்போது அனில் மிஸ்ரா, அவரது மகன் ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து இது குறித்து மேற்கொண்டு விசாரித்து வருவதாகவும், விருது விழாவிற்கு கொடுக்கப்பட்டுள்ள அனுமதியை ரத்து செய்வதற்கான வேலையில் ஈடுபட்டிருப்பதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

`அரசு வேலை' தருவதாக 21 பேரிடம் ரூ.1.37 கோடி வசூல்... `போலி பணி ஆணை' கொடுத்து மோசடி செய்த கும்பல்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம், கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி, ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன், திருப்... மேலும் பார்க்க

Train travel: மதிமுக எம்.பி துரை வைகோ பெயரில் போலி இ.கியூ கடிதம்... ரயில் பயணத்தில் சிக்கிய இளைஞர்!

கடந்த, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடில் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் 27 விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், குமார் எ... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த மங்களூருவைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அ.தி.மு.க-வில் சிறுபான்மை பிரிவில் ஒன்றிய பொறுப்பு வகித்து வந்த இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். அந்தப் ப... மேலும் பார்க்க

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடிக்கு கை, கால் முறிவு -நடந்தது என்ன?

கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர்... மேலும் பார்க்க