செய்திகள் :

திருநங்கைகள் பெண்கள் விளையாட்டில் பங்கேற்கத் தடை! கையெழுத்திட்டார் டிரம்ப்!

post image

பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் திருநங்கைகள் பங்கேற்கத் தடைவிதிக்கும் ஆணையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

பிறப்பால் ஆணாக பிறந்து, திருநங்கைகளாக மாறியவர்கள், பெண்கள் அல்லது சிறுமிகளுக்கான விளையாட்டுப் போட்டிகளில் வீராங்கனைகளாக பங்கேற்பதைத் தடை செய்யும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று கையெழுத்திட்டார்.

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துவரும் நிலையில், ஏற்கனவே மாற்றுப் பாலினத்தவர்களுக்கான பல்வேறு உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது திருநங்கைகள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது அதிக எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது.

அமெரிக்காவில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட அதிபர் டொனால்ட் டிரம்ப் ஜனவரி மாதம் பதவியேற்ற முதல் நாளில் பல முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். அமெரிக்காவில் ஆண் மற்றும் பெண் என இரண்டு பாலினங்கள் மட்டுமே அதிகாரபூர்வமானது என்ற உத்தரவையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதுபற்றி டிரம்ப் கூறுகையில், “இந்த உத்தரவின் மூலம் பெண்கள் விளையாட்டு மீது சூழப்பட்டுள்ள போர் முடிவுக்கு வந்துள்ளது” எனத் தெரிவித்தார்.

இதைக் கூறும்போது விளையாட்டு வீராங்கனைகள், எம்பிக்கள், உள்ளிட்டோர் அவரை சூழ்ந்திருந்து ஆரவரப்படுத்தினர். மேலும், இதற்கு முன்னாள் நீச்சல் வீராங்கனை ரீலி கெய்ன்ஸும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு முன்னதாக நடைபெற்ற பிரசாரங்களில் டிரம்ப், “திருநங்கை என்னும் பைத்தியகாரத் தனத்தை” முடிவுக்கு கொண்டுவருவேன் என்றும் தெரிவித்திருந்தார்.

பள்ளிகளில் பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் இருக்கக்கூடாது என்று இந்தச் சட்டம் அனைத்துப் பள்ளிகளிலும் அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைப் பள்ளிகள் பின்பற்றாத பட்சத்தில் அபராதம் விதிக்கவும் மேலும், அரசின் நிதியுதவிகள் வழங்கப்படமாட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கப்பல்களுக்கு கட்டண விலக்கு: அமெரிக்க அறிவிப்பை மறுத்த பனாமா!

பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்வாகம் மறுத்துள்ளது.அட்லாண்டிக் கடலையும் பசி... மேலும் பார்க்க

காஸா விவகாரத்தில் டிரம்பின் முடிவு ஆபத்தானது! காங்கிரஸ்

காஸா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவு விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் மோடி தலைமைய... மேலும் பார்க்க

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதா... மேலும் பார்க்க

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெர... மேலும் பார்க்க

‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’

ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்க... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பேச்சு நடத்தி இருதரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு - பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

காஷ்மீா் பிரச்னை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்தாா். காஷ்மீா் மக்களுக்கு... மேலும் பார்க்க