செய்திகள் :

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் கொங்கடி த்ரிஷா!

post image

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கொங்கடி த்ரிஷா இடம்பெற்றுள்ளார்.

ஜனவரி மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐசிசியின் சிறந்த வீராங்கனை விருது வழங்கப்படவுள்ளது.

இதையும் படிக்க: ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வருண் சக்கரவர்த்தி!

இந்த விருதுக்கான போட்டியில் 19 வயதுக்குட்பட்டோருக்கான இந்திய மகளிர் அணி வீராங்கனை கொங்கடி த்ரிஷா உள்பட மூவர் இடம்பெற்றுள்ளனர். மேற்கிந்தியத் தீவுகளின் கரிஷ்மா ராம்ஹரக் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் பெத் மூனி இருவரும் இந்த போட்டியில் இடம்பெற்றுள்ளனர்.

மலேசியாவில் நடைபெற்ற ஐசிசியின் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பைத் தொடரில் கொங்கடி த்ரிஷா சிறப்பாக விளையாடினார். 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் உலகக் கோப்பைத் தொடரில் சதம் விளாசிய முதல் வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார்.

உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இந்தத் தொடர் முழுவதும் சிறப்பாக விளையாடிய கொங்கடி த்ரிஷாவுக்கு தொடர் நாயகி விருது வழங்கப்பட்டது.

முதல் ஒருநாள்: மூவர் அரைசதம்; இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்ரவர... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார். ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் த... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ... மேலும் பார்க்க

கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளார். இந்தியா - இங்கிலாந்த... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 249 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்... மேலும் பார்க்க

அசத்திய ஆஸி.: முதல்நாளில் 9 விக்கெடுகளை இழந்த இலங்கை அணி!

காலேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளை வரை 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெடுகள் இழப்புக்கு 22... மேலும் பார்க்க