செய்திகள் :

சிவகாசி: பஸ்ஸில் இடம்பிடிக்க தங்கநகையுடன் பையை போட்ட பெண்... எடுத்துக்கொண்டு ஓடிய மூதாட்டி..!

post image

சிவகாசியில் பெண்ணிடம் நகை திருடிய வழக்கில் மூதாட்டிகள் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். சூப்பர் மார்க்கெட்டில் நடந்த திருட்டில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டவர்களிடம் விசாரணை நடத்தும்போது அவர்கள் ஏற்கெனவே பெண் ஒருவரிடம் நகை திருடியதும் அம்பலமானது. இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம்.

கைது

அப்போது நம்மிடம் பேசியவர்கள், "சிவகாசி வள்ளலார் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜான்சி ராணி (வயது 37). அச்சு நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 19ம் தேதி தனது தாயார் வீட்டுக்கு செல்வதற்காக சிவகாசி பேருந்து நிலையத்திற்கு கையில் பையுடன் வந்திருந்தார். அப்போது பேருந்து நிலையத்திற்குள் பஸ் வரவும், கூட்டநெரிசலை தவிர்த்து இடம்பிடிப்பதற்காக பஸ் ஜன்னல் வழியே தான் வைத்திருந்த பையை உள்ளே தூக்கிப்போட்டு ஜான்சிராணி இடம் பிடித்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து அவர், படி வழியாக உள்ளே ஏறி சென்று பார்த்தபோது, பைக்குள் வைத்திருந்த பர்ஸ் மட்டும் மாயமாகியிருந்தது. தொடர்ந்து, பஸ் முழுவதும் தேடியும் மாயமான பர்ஸ் கிடைக்கவில்லை. மாயமான அந்த பர்ஸூக்குள், 2பவுன்‌ தங்கநகையை ஜான்சிராணி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.

கைது

தொடர்ந்து இதுதொடர்பாக, சிவகாசி டவுன் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று இரவு, சிவகாசியில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் திருடியதாக கையும் களவுமாக மூன்று பெண்களை பிடித்து வந்து சிவகாசி நகர் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் பிடிப்பட்டவர்கள் மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள விக்கிரமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டியம்மாள் (வயது 55), ராக்கம்மாள் (60), திருமங்கலம் கொக்குளம் சுடுகாட்டுத்தெருவைச் சேர்ந்த தேடா செல்வம் (60) ஆகியோர் என தெரியவந்தது.

கைது

போலீஸாரின் விசாரணையில் சூப்பர் மார்க்கெட்டில், திருடியது மட்டுமல்லாமல், ஜான்சிராணியிடம் நகையை திருடிச் சென்றதும் இவர்கள்தான் என தெரியவந்தது. இதையடுத்து, முத்துப்பாண்டியம்மாள், ராக்கம்மாள் மற்றும் தேடா செல்வம் ஆகிய மூவரையும் கைது செய்த சிவகாசி போலீஸார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்." என்று தெரிவித்துள்ளனர்.

புதுச்சேரி டு விழுப்புரம்: `பைக் எப்படி ஓடுது?’ -பெட்ரோல் டேங்க்கில் மது கடத்தல்.. அதிர்ந்த போலீஸ்!

தமிழகத்துடன் ஒப்பிடுகையில் புதுச்சேரியில் மதுபானங்களில் விலை குறைவு. அதனால் புதுச்சேரியை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர், திண்டிவனம் போன்ற தமிழகப் பகுதிகளைச் சேர்ந்த குற்றப் பின்னணி கொண்ட சிலர், ப... மேலும் பார்க்க

திருச்சி: மாநகராட்சி தண்ணீர் தொட்டியில் மனித கழிவு! -மக்கள் அதிர்ச்சி... போலீஸார் தீவிர விசாரணை!

திருச்சி, காந்தி மார்க்கெட் அருகே 5000 லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தண்ணீர் தொட்டி ஒன்று உள்ளது. இந்த தொட்டியில் ஏறிய சில மர்ம நபர்கள் மர்ம பொருளை வீசி சென்றதை அந்த பகுதி மக்கள் கவனித்ததாகச் சொல்லப... மேலும் பார்க்க

மும்பை : `தாதாசாஹேப் பால்கே' பெயரில் விருது : பாலிவுட் பிரபலங்களிடம் கோடிக்கணக்கில் மோசடி?

மும்பையில் அடிக்கடி சினிமா விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பழம்பெரும் நடிகர்கள் பெயரில் வழங்கப்படுவதுண்டு. சினிமாவோடு தொடர்புடைய சில அமைப்புகள் இவ்விருது வழங்கும் விழாக்களை நடத்துவது வ... மேலும் பார்க்க

`அரசு வேலை' தருவதாக 21 பேரிடம் ரூ.1.37 கோடி வசூல்... `போலி பணி ஆணை' கொடுத்து மோசடி செய்த கும்பல்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம், கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி, ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன், திருப்... மேலும் பார்க்க

Train travel: மதிமுக எம்.பி துரை வைகோ பெயரில் போலி இ.கியூ கடிதம்... ரயில் பயணத்தில் சிக்கிய இளைஞர்!

கடந்த, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடில் ... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் 27 விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், குமார் எ... மேலும் பார்க்க