செய்திகள் :

Train travel: மதிமுக எம்.பி துரை வைகோ பெயரில் போலி இ.கியூ கடிதம்... ரயில் பயணத்தில் சிக்கிய இளைஞர்!

post image

கடந்த, 2024-ம் ஆண்டு நவம்பர் மாதம் 24-ஆம் தேதி சென்னையில் இருந்து சங்கரன்கோவிலுக்கு பொதிகை விரைவு ரயிலில் ஸ்டீபன் சத்தியராஜ் என்ற பயணிக்கு, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் லெட்டர் பேடில் பரிந்துரைக் கடிதம் (இ.கியூ) அளிக்கப்பட்டதாக கூறி, அவருக்கு அவசர ஒதுக்கீடு அடிப்படையில் பயணம் அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பரிந்துரைக் கடிதத்தின் மீது சந்தேகம் கொண்ட சென்னை ரயில்வே டிக்கெட் பரிசோதர்கள், அலுவலா்கள், திருச்சி எம்.பி துரை வைகோவின் உதவியாளா் சங்கரைத் தொடா்பு கொண்டு விசாரித்தனா். இதில், அந்தப் பரிந்துரைக் கடிதம், எம்பி அலுவலகத்தில் இருந்து கொடுக்கப்பட்டதல்ல. அது போலியானது என்று கண்டறியப்பட்டது.

இதனால், அந்த பயணி ஸ்டீபன் சத்தியராஜின் தொடா்பு எண்ணில் தொடர்புகொண்டு, எம்பி-யின் உதவியாளா் சங்கா் பேசியபோது, அவா் புதுக்கோட்டை காந்திநகரைச் சோ்ந்தவா் எனக் கூறியிருக்கிறார். இதனால், அவர்மீது புதுக்கோட்டை கணேஷ் நகா் காவல் நிலையத்தில் எம்.பி துரை வைகோ தரப்பில் புகாா் அளிக்கப்பட்டது. அப்படி, திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோவின் உதவியாளர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் அந்த பயணியிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ரயில் - train

அவர்களின் நீண்ட விசாரணைக்குப் பிறகு சங்கரன்கோவிலைச் சோ்ந்த ராம்குமாா் (வயது 30) என்பவா் தனது கணினி மையத்தில் இந்தப் போலி பரிந்துரைக் கடிதத்தை தயாா் செய்து கொடுத்ததைக் கண்டுபிடித்தனா். இதைத் தொடா்ந்து, கணேஷ்நகா் காவல் நிலைய போலீஸாா், ராம்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனா். மேலும், இதுபோன்று ராம்குமார் போலி இ.கியூ ஃபார்ம் அடித்து பண மோசடியில் ஏதும் ஈடுபட்டாரா எனற கோணத்தில் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி தொகுதி ம.தி.மு.க எம்.பி துரை வைகோ பெயரில் போலி பரிந்துரை கடிதம் அடித்துக் கொடுத்த புகாரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திருச்சி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

`அரசு வேலை' தருவதாக 21 பேரிடம் ரூ.1.37 கோடி வசூல்... `போலி பணி ஆணை' கொடுத்து மோசடி செய்த கும்பல்!

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (42). இவர் அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி வருகிறார். இவரிடம், கொடுவிலார்பட்டியைச் சேர்ந்த மகாலட்சுமி, ஆண்டிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன், திருப்... மேலும் பார்க்க

புதுக்கோட்டை: கடலில் மீன் பிடிக்கச் சென்ற இளைஞருக்கு நேர்ந்த சோகம்... போலீஸ் விசாரணை!

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள ஜெகதாபட்டினம் விசைப்படகு துறைமுகத்திலிருந்து நேற்றைய தினம் 27 விசைப்படகுகளில் மீனவர்கள் அரசு அனுமதி பெற்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதில், குமார் எ... மேலும் பார்க்க

ஜகபர் அலி கொலை வழக்கு: குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயத்தை அடுத்த மங்களூருவைச் சேர்ந்தவர் ஜகபர் அலி. அ.தி.மு.க-வில் சிறுபான்மை பிரிவில் ஒன்றிய பொறுப்பு வகித்து வந்த இவர், சமூக ஆர்வலராகவும் செயல்பட்டு வந்திருக்கிறார். அந்தப் ப... மேலும் பார்க்க

போட்டோ எடுத்து மிரட்டி சிறுமியை பாலியல் கொடுமை செய்த இளைஞர் -போக்சோ வழக்கில் கைது!

தஞ்சாவூர் பூமால் ராவுத்தர் தெருவை சேர்ந்தவர் சத்தியசீலன்(22). இவர் மளிகைக்கடை ஒன்றில் பொருள்கள் டோர் டெலிவரி செய்யும் வேலை செய்து வந்தார். இந்த நிலையில் 17 வயது சிறுமி ஒருவரை இவர் காதலித்ததாக சொல்லப்ப... மேலும் பார்க்க

ராணிப்பேட்டை: காவல் நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு; ரவுடிக்கு கை, கால் முறிவு -நடந்தது என்ன?

கடந்த 2-ம் தேதி இரவு 11.00 மணி, ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையம் மீது 2 பெட்ரோல் குண்டுகளை இளைஞர்கள் சிலர் வீசிவிட்டு தப்பிஓடினர்.இரவு ரோந்துப் பணிக்கு காவலர்கள் சென்றுவிட்டதால் முதல் நிலைக் காவலர்... மேலும் பார்க்க

சென்னை: அண்ணா சாலையில் ஸ்பைடர் மேனாக வலம் வந்த சுவீட்ஸ் கடைக்காரர் - பிடித்துச் சென்ற போலீஸார்

சென்னை அண்ணாசாலையில் ஸ்பைடர் மேன் உடையணிந்தவர், அவ்வழியாக சென்றவர்களிடம் படத்தில் வருவது போல் அங்கும் இங்கும் குதித்து காண்பித்தார். குழந்தைகளைப் பார்த்ததும் படத்தில் வரும் ஸ்பைடர் மேனாகவே அந்த நபர் ம... மேலும் பார்க்க