செய்திகள் :

ஓய்வை அறிவித்தது ஏன்? மார்கஸ் ஸ்டாய்னிஸ் விளக்கம்!

post image

ஆஸி. வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தது எளிதான முடிவல்ல எனக் கூறியுள்ளார்.

ஆஸ்திரேலியாவின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸ் ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்து அதிர்ச்சியளித்துள்ளார்.

71 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஸ்டாய்னிஸ் 1,495 ரன்கள் 48 விக்கெட்டுகள் எடுத்துள்ளார்.

35 வயதாகும் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளையாடி புகழ்ப்பெற்றவர். டி20 போட்டிகளில் கவனம் செலுத்த இந்த முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசியதாக கிரிக்கெட் ஆஸ்திரேலிய ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

எளிதான முடிவல்ல

எனது நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தி உச்சபட்ச அளவில் விளையாடியதை நினைத்து எப்போதும் மகிழ்ச்சியடைவேன்.

ஓய்வை அறிவித்தது எளிதான முடிவல்ல. ஆனால், ஒருநாள் போட்டிகளில் இருந்து விலகுவதற்கு இதுதான் சரியான நேரமென கருதுகிறேன். அதேசமயம் எனது கிரிக்கெட் வாழ்வின் அடுத்த கட்டத்தில் முழுமையான கவனத்தை செலுத்த இந்த முடிவை எடுத்துள்ளேன்.

தலைமைப் பயிற்சியாளர் (மெக்டொனால்டு) உடன் எனக்கு அருமையான பந்தம் இருந்தது. அவரது ஆதரவுக்கு பாராட்டுகள்.

பாகிஸ்தானில் எனது சகவீரர்களுக்காக நான் கைதட்டி மகிழ்வேன் என்று கூறியுள்ளார்.

ஸ்டாய்னிஸ் - நல்ல மனிதர்

ஆசி. தலைமைப் பயிற்சியாளர் மெக்டொனால்டு , “ஒருநாள் போட்டிகளில் ஸ்டாய்னிஸ் பத்தாண்டுகளுக்கும் மேலாக முக்கியமான அங்கமாக இருந்துள்ளார். முக்கியமான வீரராக மட்டுமில்லாமல் அருமையான மனிதரும்கூட. இயற்கையாகவே ஒரு நல்ல தலைவர் அவர். மிகவும் பிரபலமான நல்ல மனிதர்” எனக் கூறியுள்ளார்.

ஏற்கனவே கம்மின்ஸ், ஹேசில்வுட், மார்ஷ் காயம் காரணமாக விலகியுள்ள நிலையில் இவரது ஓய்வு முடிவு ஆஸி. அணிக்கு பின்னடைவை ஏற்படுத்துமென கருதப்படுகிறது.

பிப்.19இல் தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபிக்கான 15 பேர் கொண்ட அணியை பிப்.12க்குள் அறிவிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

அசத்திய ஆஸி.: முதல்நாளில் 9 விக்கெடுகளை இழந்த இலங்கை அணி!

காலேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளை வரை 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெடுகள் இழப்புக்கு 22... மேலும் பார்க்க

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் வருண் சக்கரவர்த்தி!

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இடம்பெற்றுள்ளார்.கடந்த மாதத்தில் சிறப்பாக செயல்பட்ட வீரர்களை ஐசிசி தேர்வு செய்துள்ளது. ஐசி... மேலும் பார்க்க

லாகூர் கடாபி திடல் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு! -பாக். கிரிக்கெட் வாரியம்

லாகூர் கடாபி திடல் புதுப்பிக்கும் பணிகள் நிறைவு பெற்றுள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.இந்தியா, பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் மோதும் 9-வது சாம்பியன்ஸ் டிராபி தொடர் வருகிற 19 ஆம் தேதி த... மேலும் பார்க்க

10 ஆண்டுகளுக்குப் பிறகு மே.இ.தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் ஆஸ்திரேலியா!

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தியத் தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3... மேலும் பார்க்க

விராட் கோலி நீக்கமா? ரோஹித் சர்மா விளக்கம்!

இங்கிலாந்து உடனான முதல் ஒருநாள் போட்டியில் விராட் கோலி விளையாடாதது ரசிகர்களை ஏமாற்றமடைய செய்துள்ளது. பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக விளையாடவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா - இங்கிலாந... மேலும் பார்க்க

முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்து பேட்டிங் தேர்வு!

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம், நாகபுரியில் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் பேட்டிங்கை தேர்வு செய்தார். டி20யில் இருந்த அதே... மேலும் பார்க்க