செய்திகள் :

கப்பல்களுக்கு கட்டண விலக்கு: அமெரிக்க அறிவிப்பை மறுத்த பனாமா!

post image

பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்திருக்கும் நிலையில், அதனை பனாமா கால்வாய் நிர்வாகம் மறுத்துள்ளது.

அட்லாண்டிக் கடலையும் பசிபிக் கடலையும் இணைப்பதற்காக அமெரிக்காவின் பெரும் நிதியுடன் பனாமாவில் 1914ஆம் ஆண்டு கால்வாய் உருவாக்கப்பட்டது. அமெரிக்க நிர்வாகத்தின் கீழ் இயங்கிய பனாமா கால்வாய், பெரும் அரசியல் போராட்டங்களுக்கு பிறகு பனாமா நாட்டிடன் 1999-ல் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக பொறுப்பேற்றிருக்கும் டிரம்ப், பனாமா கால்வாயில் அமெரிக்காவின் போர்க்கப்பல் மற்றும் வணிக கப்பல்களுக்கு நியாயமற்ற கட்டணங்கள் வசூலிப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதனிடையே, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ கடந்த வாரம் பனாமா நாட்டுக்குச் சென்று அந்நாட்டின் அதிபரை நேரில் சந்தித்துப் பேசியிருந்தார்.

இந்த நிலையில், பனாமா கால்வாய் வழியாகச் செல்லும் அமெரிக்க போர்க்கப்பல் மற்றும் அரசு கப்பல்களுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது, இதன்மூலம் பல மில்லியன் டாலர்கள் சேமிக்கப்படும் என்று அமெரிக்க அரசு புதன்கிழமை தெரிவித்திருந்தது.

ஆனால், அமெரிக்க அரசின் அறிவிப்பை பனாமா கால்வாய் ஆணையம் நிராகரித்துள்ளது.

இதையும் படிக்க : இந்தியர்களின் கை, கால்களில் விலங்கு: ஏலியன் எனக் குறிப்பிட்டு விடியோ பகிர்ந்த அமெரிக்கா

இதுதொடர்பாக பனாமா கால்வாய் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,

“அமெரிக்க வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்புக்கு பதிலளிக்கும் வகையில் இந்த செய்தி வெளியிடப்படுகிறது. கால்வாயின் சுங்கக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்களை நிர்ணயிக்க பனாமா கால்வாய் ஆணையத்துக்கு மட்டுமே உள்ளது. நாங்கள் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

அமெரிக்க அரசு மற்றும் போர்க்கப்பல் போக்குவரத்து தொடர்பாக அந்நாட்டு அதிகாரிகளுடன் உரையாட ஆணையம் தயாராக உள்ளது” எனக் குறிப்பிட்டுள்ளது.

காஸா விவகாரத்தில் டிரம்பின் முடிவு ஆபத்தானது! காங்கிரஸ்

காஸா விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் முடிவு விசித்திரமானதாகவும் ஆபத்தானதாகவும் இருப்பதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.மேலும், இந்த விவகாரத்தில் மோடி தலைமைய... மேலும் பார்க்க

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகல்!

அமெரிக்காவை தொடர்ந்து உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து ஆர்ஜென்டீனாவும் விலகுவதாக புதன்கிழமை அறிவித்துள்ளது.உலக சுகாதார அமைப்புக்கு 8.75 மில்லியன் டாலர் நிதியை ஆர்ஜென்டீனா வழங்கி வந்தது. இது உலக சுகாதா... மேலும் பார்க்க

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெர... மேலும் பார்க்க

‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’

ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்க... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பேச்சு நடத்தி இருதரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு - பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

காஷ்மீா் பிரச்னை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்தாா். காஷ்மீா் மக்களுக்கு... மேலும் பார்க்க

இந்தியாவிலிருந்து ஹசீனாவை அழைத்து வருவோம்: வங்கதேச உள்துறை அமைச்சா் உறுதி

‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவரை விரைவில் தாயகம் அழைத்து வருவோம்’ என அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சா் ஜஹாங்கீா் ஆலம் ... மேலும் பார்க்க