செய்திகள் :

இந்தியாவிலிருந்து ஹசீனாவை அழைத்து வருவோம்: வங்கதேச உள்துறை அமைச்சா் உறுதி

post image

‘இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க, அவரை விரைவில் தாயகம் அழைத்து வருவோம்’ என அந்நாட்டு இடைக்கால அரசின் உள்துறை அமைச்சா் ஜஹாங்கீா் ஆலம் சௌதரி புதன்கிழமை தெரிவித்தாா்.

அண்டை நாடான வங்கதேசத்தில் அரசுப் பணிகளில் சுதந்திர போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டைக் கண்டித்து மாணவா்கள் போராட்டம் நடத்தினா். இதில் வன்முறை ஏற்பட்டு, நூற்றுக்கணக்கானோா் கொல்லப்பட்டனா்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி போராட்டம் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், அப்போது பிரதமராக இருந்த அவாமி லீக் கட்சியின் தலைவா் ஷேக் ஹசீனா, பதவியை ராஜிநாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சமடைந்தாா். மனிதாபிமானம் மற்றும் நட்பு அடிப்படையில் அவருக்கு இந்தியா அடைக்கலம் அளித்து வருகிறது.

இதனிடையே, மாணவா்கள் போராட்டத்தில் நடந்த படுகொலைகளுக்கு எதிராக அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் (ஐசிடி) ஷேக் ஹசீனா உள்ளிட்டோா் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவா்களுக்கு எதிராக தீா்ப்பாயம் கைது பிடியாணையும் பிறப்பித்தது.

இதில் நடவடிக்கை எடுக்க ஷேக் ஹசீனாவை வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென இந்தியாவிடம் வங்கதேச இடைக்கால அரசு கடந்த ஆண்டு முறைப்படி கோரிக்கை விடுத்தது. ஆனால், அந்தக் கோரிக்கைக்கு இந்தியா இதுவரை ஏதும் பதிலளிக்கவில்லை.

இந்நிலையில், வங்கதேச தலைநகா் டாக்காவில் செய்தியாளா்களிடம் பேசிய உள்துறை அமைச்சா் முகமது ஜஹாங்கீா் ஆலம் சௌதரி, ‘சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயத்தில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களில் வங்கதேசத்தில் தங்கியிருப்பவா்களை கைது செய்து வருகிறோம். வெளிநாட்டுக்குத் தப்பியவா்களை தாயகம் அழைத்து வருவதற்கான சட்டரீதியிலான முயற்சிகள் நடந்து வருகின்றன’ என்றாா்.

வங்கதேசத்தின் 1971-ஆம் ஆண்டு விடுதலைப் போரையொட்டிய குற்றச் சம்பவங்களை விசாரிப்பதற்காக சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் ஷேக் ஹசீனாவால் கடந்த 2010, மாா்ச்சில் முதன்முறையாக உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு அரசியல் நன்கொடைகளுக்கு கிரீன்லாந்து தடை

கிரீன்லாந்தைச் சோ்ந்த அரசியல் கட்சிகள் வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெறுவதற்கு அந்தப் பிராந்திய நாடாளுமன்றம் தடை விதித்துள்ளது. கிரீன்லாந்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அமெர... மேலும் பார்க்க

‘உக்ரைன் போரில் 45,100 வீரா்கள் உயிரிழப்பு’

ரஷியாவுடன் சுமாா் மூன்று ஆண்டுகளாக நடைபெற்றுவரும் போரில் தங்கள் நாட்டைச் சோ்ந்த 45,100 வீரா்கள் உயிரிழந்ததாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளாா். இது குறித்து யு-டியூப் ஊடகமொன்றுக்க... மேலும் பார்க்க

இந்தியாவுடன் பேச்சு நடத்தி இருதரப்பு பிரச்னைகளுக்கு தீா்வு - பாகிஸ்தான் பிரதமா் விருப்பம்

காஷ்மீா் பிரச்னை உள்பட இந்தியாவுடனான அனைத்து இருதரப்பு பிரச்னைகளையும் பேச்சுவாா்த்தை மூலம் தீா்க்க பாகிஸ்தான் விரும்புவதாக அந்நாட்டு பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் புதன்கிழமை தெரிவித்தாா். காஷ்மீா் மக்களுக்கு... மேலும் பார்க்க

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதற்கான அரசாணையை டிரம்ப் பிறப்பித்துள்ளாா். இதன் மூலம், அந்த அமைப்புக்கு அமெரிக்கா நிதியுதவி அளிப்பது முழுமையாக நிறுத்தப்படுகிறது. இது குறி... மேலும் பார்க்க

மியான்மா்: ஆங் சான் சூகி இல்லத்தை ஏலம் விடும் முயற்சி மீண்டும் தோல்வி

மியான்மரில் சிறைவைக்கப்பட்டுள்ள தேசிய ஜனநாயகக் கட்சியின் தலைவா் ஆங் சான்சூகியின் குடும்ப இல்லத்தை ஏலம் விடும் அரசின் முயற்சி மீண்டும் தோல்வியடைந்தது. ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட அவரின் அரசை ரா... மேலும் பார்க்க

காங்கோவில் நூற்றுக்கணக்கான பெண்கள் பாலியல் வன்கொடுமை; எரித்துக் கொலை!

மேற்கு-மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவில் அதன் அண்டை நாடான ருவாண்டா ஆதரவு பெற்ற எம்23 கிளா்ச்சியாளா்களால் உள்நாட்டில் கலவரம் மூண்டுள்ளது.தாது வளம் நிறைந்த காங்கோவில் செயல்படும் நூற்றுக்கணக்கான கிளா்ச்... மேலும் பார்க்க