செய்திகள் :

சாம்பியன்ஸ் டிராபி: தென்னாப்பிரிக்க பந்துவீச்சாளர் திடீர் விலகல்!

post image

சாம்பியன்ஸ் டிராபிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இருந்து முன்னணி பந்துவீச்சாளர் ஜெரால்ட் கோட்ஜி திடீரென விலகுவதாக அறிவித்துள்ளார்.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் பாகிஸ்தானில் நடைபெறுகின்றன. இந்தியாவுக்கான போட்டிகள் மட்டும் துபையில் நடத்தப்படுகிறது. அனைத்து அணிகளும் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகின்றன.

இதையும் படிக்க... சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

இந்த நிலையில், பிரிட்டோரியாவில் உள்ள சென்டர் ஆஃப் எக்ஸலன்ஸ் மைதானத்தில் பந்துவீசும்போது இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டதால், பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து ஜெரால்ட் கோட்ஜி விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.

காயத்தால் அவதிப்பட்டாலும் எஸ்ஏ-20 தொடரின் ஒரு போட்டியில் மட்டும் விளையாடினார். முன்னதாக, தென்னாப்பிரிக்காவின் பயிற்சியாளர் ராப் வால்டர், லாகூரில் நியூசிலாந்திற்கு எதிரான முத்தரப்பு தொடரின் முதல் போட்டிக்கான 12 பேர் கொண்ட அணியை அறிவித்தபோது ஜெரால்ட் கோட்ஜியும் அணியில் இடம்பெற்றிருந்தார்.

இதையும் படிக்க... கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!

முதல் ஒருநாள்: மூவர் அரைசதம்; இந்தியா வெற்றி!

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்ரவர... மேலும் பார்க்க

சாம்பியன்ஸ் டிராபி தொடரிலிருந்து பாட் கம்மின்ஸ், ஜோஸ் ஹேசில்வுட் விலகல்!

சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து கேப்டன் பாட் கம்மின்ஸ் மற்றும் வேகப் பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் இருவரும் விலகியுள்ளனர்.ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19 ... மேலும் பார்க்க

கபில்தேவ், ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனையை முறியடித்த ஜடேஜா!

இங்கிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் ஒரு குறிப்பிடத்தக்க சாதனையை எட்டியுள்ளார். இந்தியா - இங்கிலாந்த... மேலும் பார்க்க

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் கொங்கடி த்ரிஷா!

ஐசிசியின் ஜனவரி மாத சிறந்த வீராங்கனை விருதுக்கான போட்டியில் இந்திய வீராங்கனை கொங்கடி த்ரிஷா இடம்பெற்றுள்ளார்.ஜனவரி மாதத்தில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களில் ஒருவருக்கு ஐச... மேலும் பார்க்க

முதல் ஒருநாள்: இருவர் அரைசதம்; இந்தியாவுக்கு 249 ரன்கள் இலக்கு!

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நாக்பூரில் இன்று (பிப்... மேலும் பார்க்க

அசத்திய ஆஸி.: முதல்நாளில் 9 விக்கெடுகளை இழந்த இலங்கை அணி!

காலேவில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட்டில் இலங்கை அணி முதல்நாள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்துள்ளது. உணவு இடைவேளை வரை 1 விக்கெட் மட்டுமே இழந்திருந்த இலங்கை அணி முதல் நாள் முடிவில் 9 விக்கெடுகள் இழப்புக்கு 22... மேலும் பார்க்க