செய்திகள் :

``அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது '' -பிரதமர் மோடி

post image
இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.

இந்த பட்ஜெட் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று பெரும் பேசுபொருளாகியிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பட்ஜெட் மீது கேள்விகள் எழுப்பி பாஜக குறித்து கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கூடிய நாடாளுமன்றத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, "இந்த காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது பேஷனாகிவிட்டது" என்று பேசியதற்குக் கடும் எதிர்ப்புகளும், கண்டனங்களும் எழுந்திருந்தன.

மோடி

இந்நிலையில், இன்றைய (பிப் 6) நாடாளுமன்றக் கூட்டத்தில் அம்பேத்கர் குறித்துப் பேசியிருக்கும் பிரதமர் மோடி, "மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்கியது 'பா.ஜ.க'தான். புதிய நாடாளுமன்றத்தின் முதல் முடிவாக இரு அவைகளிலும் மகளிருக்கு இடஒதுக்கீட்டை 'பா.ஜ.க' உறுதி செய்தது. அம்பேத்கரின் நடவடிக்கைக்கு எதிராக செயல்பட்டது காங்கிரஸ் கட்சிதான். அம்பேத்கருக்கு 'பாரத ரத்னா' வழங்காமல் மறுத்தது காங்கிரஸ். அதற்கு அவர் தகுதி என்றுகூட கருதியது. அவரை தேர்தலில் 2 முறை தோற்கடிக்க அனைத்து முயற்சிகளையும் காங்கிரஸ் செய்தது. ஆனால், இப்போது என்னை 'ஜெய்பீம்' சொல்லச் சொல்கிறது.

பிறரை பலவீனப்படுத்துவதே காங்கிரஸின் வேலைத்திட்டம். இதனால்தான் அவர்களது கூட்டணியினர் கூட காங்கிரஸை விட்டு விலகிச் செல்கின்றனர்" என்று பேசியிருக்கிறார்.

மோடி

மேலும், காங்கிரஸைக் கடுமையாகச் சாடி பேசியிருக்கும் மோடி, "குடும்ப நலனே முக்கியம் என்பது காங்கிரஸ் கட்சியின் மாடல். நாட்டின் நலன் முக்கியம் என்பதே எங்கள் 'பா.ஜ.க' வின் மாடல். எங்கள் மாடல் மீதான நம்பிக்கையிலும், நாட்டின் வளர்ச்சி மீதான நம்பிக்கையிலும்தான் மக்கள் எங்களை மூன்றாவது முறையாகத் தேர்தெடுத்துள்ளனர்" என்று பேசியிருக்கிறார்.

இந்தியர்களுக்கு கை விலங்கு: `சட்டப்படிதான் அமெரிக்கா நடந்தது, ஆனால்..' -ஜெய்சங்கர் சொல்வதென்ன?

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 104 இந்தியர்களை முதல் கட்டமாக வெளியேற்றியுள்ளது அமெரிக்கா. அவர்கள் அமெரிக்காவின் சி17 ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்... மேலும் பார்க்க

``சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்..'' -இந்தியர்களின் கை கால்களில் விலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவில் ஏற்கெனவே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபரின் உத்தரவின்படி அமெரிக்க ராணுவம் வெளியேற்றிவருகிறது. அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; கழிவறையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றது.எவ்வித பராமரிப்புமின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூய்மையற்று சுகாதார ... மேலும் பார்க்க

WHO: 'அடுத்தடுத்து விலகும் அமெரிக்கா, அர்ஜென்டினா... அதிகரிக்கும் சீனா-வின் ஆதிக்கம்?' | Explained

கடந்த ஜனவரி 20-ம் தேதி அமெரிக்க அதிபராக பதவியேற்ற ட்ரம்ப் போட்ட முதல் கையெழுத்துகளில் ஒன்று, 'உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெரிக்கா விலகுவது' குறித்ததாகும். 'உலக சுகாதார நிறுவனம் கொரோனா பேரிடரை ச... மேலும் பார்க்க

``சீமான் ப்யூர் வலதுசாரி... NTK முன்வைப்பது பாசிசம்!” - VCK ஆளூர் ஷாநவாஸ் பேட்டி

``2002-03 காலகட்டத்தில் பெரியாரை வி.சி.க-வும் கடுமையாக சாடியிருக்கிறதே... எதோ முதன்முதலாக பெரியாரை சீமான்தான் விமர்சிப்பதுபோல பேசுகிறீர்களே!”``பெரியார் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர் அல்ல. ஆனால் நாம் ... மேலும் பார்க்க

கள்ள ஓட்டு; திமுக - நாதக இடையே மோதல்... பரபரப்பாக முடிந்த ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்!

ஈரோடு கிழக்குத் தொகுதி வாக்குப்பதிவுஈரோடு கிழக்குத் தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவையொட்டி, அந்த தொகுதிக்கான இடைத் தேர்தல் இன்று (பிப்ரவரி 5) நடைபெற்றது. திமுக சார்பில் வி.சி.சந்திரக... மேலும் பார்க்க