செய்திகள் :

சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் கட்டணம்! திடுக்கிடும் தகவல்!

post image

சட்டவிரோதாமாக அமெரிக்காவுக்கு செல்வதற்காக ரூ. 60 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டதாக அந்நாட்டில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பப்பட்ட இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்கா செல்வதற்காக வாங்கப்பட்ட கடனை எப்படி அடைப்பது என்ற கேள்வியுடன் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் செய்வதறியாது இளைஞர்களும் அவர்களது குடும்பத்தினரும் தவித்து வருகின்றனர்.

சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் நடவடிக்கையை டிரம்ப் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், முதல்கட்டமாக 104 இந்தியர்களை ராணுவ விமானம் மூலம் இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளனர். இந்த விமானம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில் புதன்கிழமை பிற்பகல் தரையிறங்கியது.

பஞ்சாப், குஜராத், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 104 பேர் இந்த விமானத்தில் நாடு கடத்தப்பட்டுள்ளனர். அவர்களிடம் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக சென்றது குறித்து வெளியுறவுத் துறை அமைச்சக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிக்க : ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இருந்து அமெரிக்கா விலகல்: அதிபா் டிரம்ப் உத்தரவு

ரூ. 40 லட்சம் முதல் ரூ. 60 லட்சம் வரை கட்டணம்

இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்ட இளைஞர்களில் ஒருவரான பஞ்சாபை சேர்ந்த குர்ப்ரீத் சிங்கின் குடும்பத்தினர் கூறுகையில்,

“உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டோரிடம் இருந்து ரூ. 45 லட்சம் கடன் வாங்கி அவரை 6 மாதத்துக்கு முன்புதான் அமெரிக்காவுக்கு அனுப்பினோம், கடனை அடைக்க முடியாமல் தற்போது வீட்டை இழந்துவிட்டோம்.

அரசு உதவி செய்தால் மட்டுமே எங்களால் உயிர் வாழ முடியும். இல்லையென்றால் எல்லாம் முடிந்துவிடும்” என்று தெரிவித்தார்.

அதேபோல், ஆகாஷ்தீப் சிங் என்ற இளைஞர் அமெரிக்காவுக்கு செல்ல ரூ. 60 லட்சம் அவரை செலவிட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கு அனுப்பியது யார்?

அமெரிக்காவுக்கு அனுப்புவதற்காக இளைஞர்களிடம் ரூ. 60 லட்சம் வரை கட்டணமாக பெற்று சட்டவிரோதமாக அனுப்பிய முகவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

பஞ்சாப் வெளிநாடுவாழ் இந்தியர்கள் விவகார அமைச்சர் குல்தீப் சிங் தலிவால் கூறுகையில்,

“நாடு கடத்தப்பட்ட இளைஞர்களுடன் பேசினேன். பெரும்பாலானவர்கள் துபை பயண முகவர்கள் மூலம்தான் அமெரிக்காவுக்குச் சென்றுள்ளனர். தொலைபேசி மூலம் முகவர்கள் பேசி, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளனர்.

முதலில் இளைஞர்கள் துபை அனுப்பப்பட்டு, அங்கிருந்து பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் வழியாக அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளனர். சிலருக்கு கனடா நாட்டின் விசாக்களும் கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இதனைத் தொடர்ந்து, இளைஞர்களை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பும் பயண முகவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுத்து வருகின்றது.

காதலர் நாளன்று புதிய தொழில் தொடங்கும் கங்கனா!

நடிகை, இயக்குநர், அரசியல்வாதி எனப் பன்முகத்தன்மை கொண்ட கங்கனா ரணாவத், தொழிலதிபராக அவதாரம் எடுக்கவுள்ளார்.பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் தனது சர்ச்சை கருத்துகள் மூலம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கக்கூட... மேலும் பார்க்க

விளையாட்டு அமைப்புகளில் நோ்மை, சுதந்திரம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

இந்திய விளையாட்டு நிா்வாக அமைப்புகளில் நோ்மை, தன்னாட்சி, சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றை கொண்டுவர கடுமையான நடவடிக்கைகள் தேவை என உச்சநீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.மேலும், தனிப்பட்ட லாப... மேலும் பார்க்க

தில்லி பேரவை தேர்தல்: அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், நீதிபதிகள் வாக்களிப்பு

தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை நடைபெற்ற தேர்தலில் குடியரசுத் தலைவர் திரெüபதி முர்மு, குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா, தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் கு... மேலும் பார்க்க

குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்: இந்தியாவுக்கு உதவுவதாக சாம் ஆல்ட்மேன் தகவல்

நமது சிறப்பு நிருபர்குறைந்த செலவிலான செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை உருவாக்க இந்தியாவுக்கு உதவ தயாராக உள்ளதாக "ஓபன்ஏஐ' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் தெரிவித்தார்.செயற்கை நுண்ணறி... மேலும் பார்க்க

கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்

முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது. நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவ... மேலும் பார்க்க

உத்தரகண்ட் பொது சிவில் சட்டம்: 10 நாள்களில் ஒரேயொரு ‘லிவ்-இன்’ உறவு பதிவு

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமலுக்கு வந்து 10 நாள்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை ஒரேயொரு ‘லின்-இன்’ (திருமணம் செய்யாமல் சோ்ந்து வாழ்தல்) உறவு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தின்கீழ் ‘லி... மேலும் பார்க்க