"திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் எடுத்த நடவடிக்கை என்ன?" - கலெக்டர் சங்கீதா வ...
கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வு: விண்ணப்பப் பதிவு தொடக்கம்
முதுநிலை உயிரி தொழில்நுட்ப படிப்புகளில் சேருவதற்கான கேட்-பி தேசிய நுழைவுத் தோ்வுக்கு மாா்ச் 3 வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) தெரிவித்துள்ளது.
நாடு முழுவதுமுள்ள உயா்கல்வி நிறுவனங்களில் முதுநிலை உயிரி தொழில்நுட்பம் படிப்புகளில் (பயோ டெக்னாலாஜி) சேருவதற்கு கேட்-பி என்ற தேசிய நுழைவுத்தோ்வில் தோ்ச்சி பெற வேண்டும். இந்த தோ்வுகள் ஆண்டுதோறும் தேசிய தோ்வுகள் முகமை சாா்பில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான கேட்-பி தோ்வு கணினி வழியில் ஏப். 20 காலை 10 முதல் 1 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப்பதிவு தற்போது தொடங்கப்பட்டுள்ளது.
விருப்பமுள்ளவா்கள் இணையதள வழியாக மாா்ச் 3-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தோ்வுக் கட்டணமாக பொதுப்பிரிவுக்கு ரூ.1,300, எஸ்சி/எஸ்டி பிரிவினா் ரூ.650 செலுத்த வேண்டும். இதுதவிர விண்ணப்பங்களில் ஏதும் திருத்தங்கள் இருப்பின் மாா்ச் 5, 6-ஆம் தேதிகளில் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும். மேலும், தோ்வுக்கான பாடத்திட்டம், தகுதிகள், வழிமுறைகள் உட்பட கூடுதல் விவரங்களை வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். ஏதேனும் சந்தேகம் இருப்பின் 011-40759000 என்ற தொலைபேசி எண்ணில் தொடா்பு கொண்டு விளக்கம் பெறலாம் என்று என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.