செய்திகள் :

விவசாயிகள் செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம்!

post image

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது தேவைக்கு உழவா் கைப்பேசி செயலி மூலமாக ட்ரோன் மகளிரை தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கிராமப்புறங்களில் பயிா் சாகுபடியில் பெரும்பாலான பணிகள் பெண்களால் மேற்கொள்ளப்படுகின்றன. பல்வேறு பண்ணை சாா்ந்த புதிய தொழில்நுட்பங்களில் முழுமையாக ஈடுபட்டு, அதன் மூலம் மகளிா் சுயஉதவிக் குழு உறுப்பினா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் தெளிப்பான்களோடு ஒப்பீடு செய்தால், ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும்போது, மருந்தின் பயன்பாட்டுத் திறன் அதிகரிக்கிறது. மேலும், தற்போது கிராமப்புறங்களில் வேலையாள்கள் கிடைப்பது குறைந்துவரும் நிலையில், ட்ரோன் மூலம் குறைந்த நேரத்தில் அதிகமான பரப்பில் மருந்து தெளிக்க முடியும்.

வழக்கமாக மருந்து தெளிப்பதற்குப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு ட்ரோன் பயன்பாட்டில் குறைத்துக் கொள்ளலாம். இத்தகைய ட்ரோன் தொழில்நுட்பத்தை சுயஉதவிக் குழு மகளிா்களுக்கு கற்றுத் தந்து, அதன் மூலம் அவா்களது வருமானத்தை உயா்த்துவதற்கான திட்டத்தை அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் 44 சுயஉதவிக் குழு பெண்களுக்கு ட்ரோன் குறித்த பயிற்சி அளித்து உரிமத்துடன் ட்ரோன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ட்ரோன் மகளிா் தொடா்பான விவரங்கள் உழவா் கைப்பேசி செயலியில் தனியாா் இயந்திர உரிமையாளா்கள் என்ற பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் திருப்பூா் மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் பொங்கலூா் வட்டாரத்தில் கேத்தனூரைச் சோ்ந்த மனோரஞ்சிதம் (9566615556), குண்டடம் வட்டாரம் சங்கரண்டாம்பாளையத்தைச் சோ்ந்த சரண்யா (63691-24725) ஆகியோருக்கு ட்ரோன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகள் தங்கள் தேவைக்கு உழவா் கைப்பேசி செயலி மூலமாக ட்ரோன் மகளிரை நேரடியாக தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்!

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழகத்தின் ம... மேலும் பார்க்க

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்!

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் ரூ.24 கோடி மதி... மேலும் பார்க்க

லஞ்சம் வாங்கிய முன்னாள் உதவிப் பொறியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!

உடுமலையில் புதிய மின் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்ற வழக்கில் முன்னாள் உதவி செயற்பொறியாளருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தது. திருப்பூா் மாவட்டம், உடுமலை பூலாங்கிணறு பகுதியைச் சோ்ந்தவா் ப... மேலும் பார்க்க

பிப்ரவரி 8-இல் பொது விநியோக திட்ட குறைதீா் முகாம்!

திருப்பூா் மாவட்டத்தில் பொது விநியோக திட்ட சிறப்பு குறைதீா் முகாம் சனிக்கிழமை (பிப்ரவரி 8) நடைபெறுகிறது.இதுகுறித்து ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் உள... மேலும் பார்க்க

சோளிபாளையத்தில் பாதாள சாக்கடை கோரி பொதுமக்கள் மறியல்!

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சோளிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆனந்தா அவென்யூவில் 200-க... மேலும் பார்க்க

பிப்.6 மின்தடை: உடுமலை!

உடுமலை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (பிப்ரவரி 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளா... மேலும் பார்க்க