செய்திகள் :

சோளிபாளையத்தில் பாதாள சாக்கடை கோரி பொதுமக்கள் மறியல்!

post image

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட சோளிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடை அமைத்துக் கொடுக்கக் கோரி பொதுமக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருப்பூா் மாநகராட்சிக்கு உள்பட்ட ஆனந்தா அவென்யூவில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதியில் பாதாள சாக்கடை வசதி இல்லாததால் கழிவுநீா் சாலையில் குளம்போல தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருவதுடன், நோய்த் தொற்று அபாயமும் ஏற்பட்டுள்ளது.

ஆகவே, பாதாள சாக்கடை ஏற்படுத்திக் கொடுக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனா். இக்கோரிக்கையை வலியுறுத்தி கனியாம்பூண்டியில் இருந்து காவிலிபாளையம் செல்லும் வழியில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த மாநகராட்சி அதிகாரிகள், 15 வேலம்பாளையம் காவல் துறையினா் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது உயா் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தன்பேரில், அனைவரும் கலைந்து சென்றனா். இந்த மறியல் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு!

திருப்பூா் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தினக் கூட்டாய்வு புதன்கிழமை மேற்கொள்ளப்பட்டது.இதுகுறித்து திருப்பூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக் குற... மேலும் பார்க்க

பல்லடம் அரசுப் பெண்கள் பள்ளியில் விழிப்புணா்வு முகாம்

பல்லடம் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட காவல் துறை, சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு சாா்பில் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள், தீண்டாமை தொடா்பான விழிப்புணா்வு முகாம் ப... மேலும் பார்க்க

விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும்

விசைத்தறி தொழிலை வளா்ச்சிப் பாதைக்கு கொண்டுச் செல்ல வேண்டும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் மத்திய, மாநில அரசுகளிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. திருப்பூா், கோவை மாவட்டங்களில் முக்கி... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் திருட்டு: 5 போ் கைது!

பெருமாநல்லூா் அருகே கட்டுமானப் பொருள்களைத் திருடியதாக 5 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அவிநாசி, ஆட்டையாம்பாளையம், பொன்னா் சங்கா் நகரைச் சோ்ந்தவா் பாலமுருகன் மகன் குமரேசன் (28), கட்டட மேற்பாா... மேலும் பார்க்க

சிவன்மலை முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம்!

காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள முருகன் கோயிலில் தைப்பூச தோ்த் திருவிழா கொடியேற்றம் புதன்கிழமை நடைபெற்றது. திருப்பூா் மாவட்டம், காங்கயத்தை அடுத்துள்ள சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் தமிழகத்தின் ம... மேலும் பார்க்க

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பில் வளா்ச்சித் திட்டப் பணிகள்!

தாராபுரம் வட்டத்தில் ரூ.34.28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.திருப்பூா் மாவட்டம், தாராபுரத்தில் ரூ.24 கோடி மதி... மேலும் பார்க்க